இத்தாலியில் மாபெரும் சாதனையை படைத்த தமிழ் சிறுவன்
இத்தாலியில் நடந்த Vergani கோப்பை ஓபன் செஸ் போட்டியில் சென்னையை சேர்ந்த 14 வயது இளம் செஸ் வீரர் பரத் சுப்பிரமணியம் கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வென்று சாதனை பெற்றுள்ளார்.
சர்வதேச அளவில் செஸ் போட்டிகளில் கிராண்ட் மாஸ்டர் பட்டம் பெறுவது மிக உயரிய விருதாகவே பார்க்கப்படுகின்றது.
சென்னையை சேர்ந்த 14 வயது சிறுவன் பரத் சுப்ரமணியம் இத்தாலியில் புகழ்பெற்ற வெர்கானி கோப்பை செஸ் போட்டி நடைபெற்றதுடன்,இதில் சென்னை சிறுவன் பரத் சுப்ரமணியமும் கலந்துகொண்டுள்ளார்.
இப்போட்டியில் பரத் சுப்ரமணியம் மொத்தம் உள்ள ஒன்பது சுற்றுகளிலிருந்து 6.5 புள்ளிகளைப் பெற்றுள்ளதுடன், இதன் காரணமாக தொடரின் புள்ளிப்பட்டியலில் 7ஆவது இடத்தைப் பிடித்துள்ளார்.
அதேபோல கிராண்ட் மாஸ்டர் பட்டத்தை வெல்வதற்கான மூன்றாவது இலக்கையும் எலோ (Elo) புள்ளிகளையும் அவர் பெற்றார். அதாவது ஒருவர் கிராண்ட் மாஸ்டர் பட்டம் வெல்ல வேண்டும் எனில் 3 கட்ட கிராண்ட் மாஸ்டர் இலக்குகளைப் பூர்த்தி செய்ய வேண்டும்.
போட்டிகளில் 2,500 (Elo) புள்ளிகளையும் பெற்றிருக்க வேண்டும். இதனை பூர்த்தி செய்தால் அந்த வீரருக்கு கிராண்ட் மாஸ்டர் பட்டம் வழங்கப்படும். அதன்படி ஏற்கெனவே 2 கட்டங்களை பரத் சுப்பிரமணியம் பூர்த்தி செய்திருந்தார்.
இத்தாலியில் நடைபெற்ற போட்டியில் 3ஆவது கட்ட இலக்கையும் எட்டினார். அதேபோல 2,500 எலோ புள்ளிகளையும் அவர் பெற்றார். கிராண்ட் மாஸ்டர் பட்டம் அவருக்கு கிடைத்தது.
இதையடுத்து மற்றொரு தமிழரான செஸ் ஜாம்பவனான விஸ்வநாதன் ஆனந்த், பரத் சுப்ரமணியம் மிகவும் திறமைசாலியான சிறுவன். கிராண்ட் மாஸ்டர் பட்டம் வென்றது மகிழ்ச்சி அளிக்கிறது என வாழ்த்தியுள்ளார்.

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

தலைக்கு அடியில் பல கோடிகள்! படுக்கை முழுவதும் கத்தை கத்தையாக பணம்.. தலைசுற்ற வைக்கும் புகைப்படங்கள் News Lankasri

கண்டிப்பாக உன்னை கொல்வேன்! வெளிநாட்டில் வயதில் மூத்த பெண்ணை காதலித்த தமிழ் இளைஞனின் அராஜகம் News Lankasri

லண்டனில் தாய் மசாஜ் செய்யும் நபருக்கு 11 ஆண்டுகள் சிறை! 2 பெண்களின் துணிச்சலால் சிக்கினார் News Lankasri

ரோஜா சீரியலில் இருந்து வெளியேறிய ஹீரோ சிபு சூர்யன்! காரணம் இதோ.. ரசிகர்கள் கடும் அதிர்ச்சி Cineulagam

அடேங்கப்பா...சூப்பர் சிங்கர் ஜூனியர் 8 டைட்டில் ஜெயித்தவர்க்கு இத்தனை லட்சத்தில் பிரமாண்ட வீடா? Manithan
மரண அறிவித்தல்
திரு மருதப்பு செல்வராசா
புங்குடுதீவு இறுப்பிட்டி, புங்குடுதீவு 3ம் வட்டாரம், Bremervörde, Germany
24 Jun, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி
வைத்தியகலாநிதி நல்லதம்பி பத்மநாதன்
Kuala Lumpur, Malaysia, யாழ்ப்பாணம், London, United Kingdom, கொழும்பு
06 Jul, 2021