யாழில் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறலுக்கு எதிராக முன்னெடுக்கப்படவுள்ள போராட்டம்
வடக்கில் உள்ள இந்திய துணை தூதரகம் எதிர்வரும் ஐந்தாம் திகதி வடமாகாண கடற்றொழிலாளர்களால் முற்றுகையிடப்பட்டு, இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறிய ஊடுருவலுக்கு எதிராக போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக வடக்கு மாகாண கடற்றொழிலாளர் இணையத்தின் தலைவர் எம்.வி.சுப்பிரமணியம் குறிப்பிட்டுள்ளார்.
கடற்றொழிலாளர்களின் போராட்டம் தொடர்பில் ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட அவர், கடந்த பெப்ரவரி 23ஆம் திகதி வடக்கு மாகாண கடற்தொழிலாளர் இணையத்தின் பொது சபை கூட்டம் முல்லைதீவிலே நடைபெற்றது. அதன்போது குறித்த தீர்மானம் எடுக்கப்பட்டது.
உணர்ச்சி பூர்வமான போராட்டம்
இந்திய கடற்றொழிலாளர்கள் எல்லைகடந்து கடற்றொழிலில் ஈடுபடுவதற்கு எதிராக எதிர்வரும் ஐந்தாம் திகதி கடற்றொழிலாளர்களின் போராட்டமானது யாழ். கச்சேரியில் இருந்து ஆரம்பமாகி யாழ்ப்பாணத்தில் உள்ள இந்தியத் துணைத் தூதரகம் வரை நடைபெறவுள்ளது.
இந்தப் போராட்டத்தை ஆக்கபூர்வமான, ஒரு உணர்ச்சி பூர்வமான போராட்டமாக மாற்ற வேண்டுமாக இருந்தால் இங்கே உள்ள பல அமைப்புகள், அனைத்து கடற்றொழிலாளர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் என அனைவரும் அதிலே முழுமையாக பங்குபற்றி வெற்றிபெறச் செய்ய வேண்டும்.
இந்தியாவிலிருந்து வருகின்ற படகுகளை நிறுத்துவதற்கு எமது அரசாங்கத்தால் முடியாது. அரசாங்கம் ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது. இந்திய அரசாங்கம் நடித்துக் கொண்டு ஏமாற்றிக் கொண்டிருக்கின்றது அது எங்களுக்கு தெரிந்த விடயம்.
வட புலத்திலே வாழுகின்ற கடற்றொழிலாளர்கள் தொடர்ச்சியாகவே துன்பத்தையே தமது வாழ்க்கையாக வாழ்ந்து, பல சவால்கள் மத்தியிலே உயிர்களை தக்க வைத்துக் கொண்டிருக்கின்றனர்.
சட்ட விரோதமான தொழில்
இந்த நிலைமைக்கு நாங்கள் தள்ளப்பட்டமைக்கு முக்கியமான காரணம் போராக இருந்தாலும், அடுத்ததாக இங்கே பூதாகரமாக புரையோடிக் கிடக்கின்ற இந்த இந்திய இழுவை படகினுடைய அத்துமீறிய வருகையும், அவர்களுடைய அடாவடித்தனமான சட்ட விரோதமான தொழில் முறையுமே காரணமாக இருக்கின்றது.
இதன் மூலமாக அவர்கள் எங்களுடைய கடல் வளங்களை அழித்துச் செல்கின்றார்கள். வாழ்வாதாரத்தை சூறையாடி செல்கின்றார்கள். கடற்தொழில் உபகரணங்களை அடுத்து நாசமாக்கிவிட்டு செல்கின்றார்கள்.
ஒரு நாளைக்கு மூன்று தடவைகள் இந்திய படகுகள் வந்து எங்களது வளங்களை அள்ளிச் செல்கின்றன. சாதாரணமாக ஒரு பத்தாயிரம் அல்லது முப்பதாயிரம் இந்திய ரூபாய்க்கு ஒரு படகில் வந்து மீனை பிடிக்கின்றீர்கள்.
இந்திய- இலங்கை ஒப்பந்தம்
இந்த முப்பதாயிரம் ரூபா இலங்கை காசுக்கு ஏறக்குறைய ஒன்றேகால் இலட்சத்துக்கு மேலே வரும். அந்தவகையில் ஒரு படகு ஒரு வருடத்துக்கு 60 கோடிக்கு அதிகமான மீனை பிடித்துக் கொண்டு போகின்றது.
இதை 2500 படகினால் பெருக்கிப் பாருங்கள் எத்தனை ஆயிரம் கோடியை இந்திய கடற்றொழிலாளர்கள் அள்ளிக் கொண்டு போகின்றார்கள் என்பது புரிய வரும்.
ஏறக்குறைய 1987 ஆம் ஆண்டு இந்திய – இலங்கை ஒப்பந்தத்திற்கு பிறகு 40 வருட காலமாக எங்களது கடலை வாரி செல்கின்றீர்கள்.
எத்தனை ஆயிரம் கோடிகளை கொண்டு போய் விட்டீர்கள். ஆனால் எமது அகதிகளுக்கு வரிப்பணத்தில் கொடுப்பதாக கொக்கரிக்கின்றீர்கள். எங்களது கடலை எங்களிடம் விடுங்கள் நாங்கள் எங்களுக்கு கிடைக்கின்ற வருவாயில் அகதிகளுக்கு காசு அனுப்புகின்றோம் என தெரிவித்துள்ளார்.

புதிய அரசியல் ஒழுங்கில் புவிசார் அரசியல் யுத்தங்கள் 9 மணி நேரம் முன்

பிரித்தானியாவில் ஆயிரக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் Amazon., 40 பில்லியன் பவுண்டு முதலீடு News Lankasri

ஏர் இந்திய விமான விபத்து எங்கள் செயல் - காதலனை பழி வாங்க போலி மிரட்டல் விடுத்த சென்னை பெண் News Lankasri

முதல்முறையாக ஏவுகணை சோதனை நடத்திய ஆசிய நாடு - சீனாவை எதிர்த்து பாதுகாப்புத் திட்டம் தீவிரம் News Lankasri
