அம்பாறையில் முன்னெடுக்கப்பட்ட காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் போராட்டம்
சர்வதேச ரீதியில் சிறுவர் தினம் கொண்டாடப்பட்டு வரும் நிலையில் தமிழர் தாயக பகுதிகளில் இலங்கையில் 8மாவட்டங்களிலும் காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளின் சங்கத்தினரால் போராட்டங்கள் முன்னெடுக்கப்பட்டன.
அந்த வகையில் நேற்றைய தினம்(01.10.2024) அம்பாறை மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுளின் சங்க தலைவி தம்பிராசா செல்லவராணி தலைமையில் முன்னெடுக்கப்பட்டது.
மேலும், தம்பிலுவில் மத்திய சந்தை வளாத்தில் வடக்கு - கிழக்கில் காணமல் ஆக்கப்பட்ட 1000ற்கும் மேற்பட்ட சிறுவர்களுக்கு நீதி வேண்டி மெழுகு வர்த்தி ஏற்றி பிராத்தனையும் இதன்போது முன்னெடுக்கப்பட்டது.
சர்வதேச சிறுவர் தினம்
இதன்போது கருத்து தெரிவித்த தம்பிராசா செல்லவராணி, “இலங்கையில் உள்ள எட்டு மாவட்டங்களின் குறித்த சர்வதேச சிறுவர் தினமானது கறுப்பு தினமாக கருதபடுவதுடன் கடந்த யுத்தகாலத்தில் சரணடைந்த 39 சிறுவர்களின் நிலை என்ன அவர்களுக்கு என்ன நடந்தது என்று உண்மை தெரிய வேண்டும்.
உலக அரங்கிலும் சர்வதேசத்திலும் கேட்டு நிற்கின்றோம். இனிமேல் இந்த சிறுவர்கள் காணாமல் ஆக்ககூடாது.
சிறுவர்களுக்கு பாதுகாப்பு வேண்டும் எனும் நோக்கத்தில் சர்வதேச சிறுவர் தினத்தை கறுப்பு தினமாக கருதி இலங்கையில் உள்ள 8மாவட்ட வலிந்து காணாமல் உறவுகளின் சங்கத்தினால் போராட்டம் இடம்பெறுகிறது” என்றார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ராஜநாகங்களின் ராஜ்யம்: இந்தியாவில் மனிதர்களை விட நாகங்கள் அதிகம் வாழும் நகரம் எது தெரியுமா? Manithan

அமெரிக்கா, சீனாவின் மேலாதிக்கத்திற்கு அச்சுறுத்தல்: 3.5 பில்லியன் தங்கம் டெபாசிட் கண்டுபிடிக்கப்பட்ட நாடு News Lankasri

சர்ச்சைகளுக்கு நடுவில் குட் நியூஸ் சொன்ன ரவிமோகன்.. ஆடிப்போன திரையுலகம்- குவியும் வாழ்த்துக்கள் Manithan

தக் லைஃப் படத்தில் சிம்பு ரோலில் முதன் முதலில் நடிக்கவிருந்த நடிகர் யார் தெரியுமா! அட இவரா Cineulagam
