பல்கலைக்கழக பட்டம் பெற சென்ற குடும்பத்திற்கு நேர்ந்த கதி
பேராதனையில் இருந்து அக்மீமன பகுதியை நோக்கிச் சென்ற சொகுசு காரொன்று விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் நால்வர் படுகாயமடைந்துள்ளனர்.
பேராதனை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு வீடு திரும்பும் போது, ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 8 பேரை ஏற்றிச் சென்ற சொகுசு காரொன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த கார் சீமெந்து ஏற்றிச் சென்ற லொறியுடன் மோதியதால் இந்த விபத்து நேர்ந்துள்ளதுடன், அக்மீமன பகுதியைச் சேர்ந்த யு.கமகே ரத்னசேன என்ற 67 வயதுடைய நபர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.
பேராதனைப் பல்கலைக்கழகத்தில் நேற்றைய தினம் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற 29 வயதுடைய மருத்துவ பட்டதாரி தனது குடும்பத்துடன் அக்மீமனவில் உள்ள தனது வீட்டிற்கு அதிவேக வீதியில் சென்று கொண்டிருந்த போதே இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
நேற்று பட்டம் பெற்ற 29 வயதுடைய மருத்துவ பட்டதாரி தனது குடும்பத்துடன் அக்மீமனவில் உள்ள தனது வீட்டிற்கு அதிவேக வீதியில் சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
உயிரிழந்தவர் காரின் பின் இருக்கையில் பயணித்தவர் எனவும் அவர் வாகனத்தை ஓட்டியவரின் தந்தை எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காயமடைந்த நால்வரில் 29 வயதுடைய மருத்துவப் பட்டதாரியும், காரை ஓட்டிய அவரது சகோதரரும், அவர்களின் ஏழு, நான்கரை வயதுடைய மூன்று பிள்ளைகளும் உள்ளடங்குவதாக தெரியவந்துள்ளது.
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam