இலங்கை கொடி பறக்கவில்லை! - ஐநா சபை விடுத்துள்ள எச்சரிக்கை (பத்திரிக்கை கண்ணோட்டம்)
திருகோணமலை எண்ணெய்க் குத வளாகங்களின் 50 வீத பங்குகள் இலங்கை வசம் உள்ளதாகவும், அப்பிரதேசத்தில் இலங்கை தேசியக் கொடியை பறக்கவிடப்பட்டுள்ளதாகவும் எரிசக்தி அமைச்சர் கூறியிருந்தார்.
எனினும் அவ்வாற்று எந்த ஒரு நடவடிக்கையையும் இந்த எண்ணெய் குதங்கள் அமைந்திருக்கின்ற வளாகங்களில் மேற்கொள்ளப்படவில்லை என தேசிய பிக்குகள் முன்னணியின் பொது செயலாளர் வாகமுல்ல உதித்த தேரர் தெரிவித்துள்ளார்.
திருகோணமலை சீனகுடா எண்ணெய் குதங்கள் இந்தியாவிற்கு விற்பனை செய்தமைக்கு எதிர்ப்பு தெரிவித்து முன்னெடுக்கப்பட்ட போராட்டத்தில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்ட அவர் இதனை கூறினார்.
இது குறித்த மேலதிக தகவல்களுடன் வருகின்றது இன்றைய பத்திரிக்கை கண்ணோட்டம்.