இலங்கையின் நிலைமை இயல்பு நிலைக்கு வரவில்லை! - சுகாதார அமைச்சகம்
கோவிட் நோய்த்தொற்றுகள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் சிறிதளவு குறைவு இருந்தபோதிலும், நிலைமை இயல்பு நிலைக்கு வரவில்லை என்று இலங்கையின் சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஊடகவியலாளர்களிடம் உரையாற்றிய சுகாதார சேவைகள் பிரதி பணிப்பாளர் ஹேமந்த ஹேரத், நிலைமை எப்போதும் மோசமாக மாறலாம் என்று எச்சரித்துள்ளார்.
நாளாந்த தொற்றுக்கள் மற்றும் இறப்புகளின் எண்ணிக்கையில் ஒரு சிறிய குறைவு ஏற்பட்டுள்ளது. இருப்பினும், அதே வேகத்தில், அது தொடரும் என்று உத்தரவாதம் அளிக்க முடியாது என்று அவர் கூறியுள்ளார்.
எனவே திருப்திகரமான சூழ்நிலையை அடைவதற்குச் சுகாதார வழிகாட்டுதல்களைக் கண்டிப்பாக கடைப்பிடிப்பதன் மூலம் அதிகாரிகள் மற்றும் பொது மக்கள் இருவரும் தங்கள் கடமைகளை நிறைவேற்றுவது அவசியம் என்று ஹேரத் தெரிவித்துள்ளார்.
கொடூர வில்லனாக என்ட்ரி கொடுக்கும் ராவணன் ஆதிமுத்து, யாரு பாருங்க... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
அப்பா, மனைவிக்கு கோடிக்கணக்கில் கடன்: தவெக தலைவர் விஜய்யின் முழு சொத்து மதிப்பு விவரம் News Lankasri