36 ஆயிரம் மெட்ரிக் தொன் பசளையுடன் இலங்கைக்கு வந்தடைந்த கப்பல்!
சேற்றுப் பசளை என்றழைக்கப்படும் செறிவூட்டப்பட்ட பொஸ்பேட் அல்லது TSP பசளை ஏற்றிய கப்பலொன்று கொழும்பு துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.
ஐக்கிய நாடுகளின் உணவு மற்றும் விவசாய அமைப்பு மற்றும் USAID நிறுவனத்தின் உதவியின் கீழ், குறித்த பசளை இலங்கைக்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த கப்பலில் 36 ஆயிரம் மெட்ரிக் தொன் பசளை ஏற்றிவரப்பட்டுள்ளது.
இலவசம்
இதற்கு மேலதிகமாக மற்றுமொரு கப்பலும் பொஸ்பேட் பசளை ஏற்றிக் கொண்டு எதிர்வரும் நாட்களில் நாட்டை வந்தடையவுள்ளதாக விவசாய அமைச்சு அறிவித்துள்ளது.
ஒரு ஹெக்டேயருக்கு 55 கிலோ கிராம் TSP உரம் வீதம், நாட்டிலுள்ள 12 இலட்சம் விவசாயிகளுக்கு இதனை இலவசமாக வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை முதல் குறித்த உரத் தொகையை விநியோகிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக விவசாய அமைச்சு கூறியுள்ளமை குறிப்பிடத்தக்கது.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 4 மணி நேரம் முன்

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

பிரித்தானியாவில் ட்ரம்பின் வரலாற்று சிறப்புமிக்க பயணம்: கேட்டைப் பார்த்து அவர் கூறிய வார்த்தை News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
