இலங்கை மக்களிடம் இராணுவ தளபதி விடுக்கும் கோரிக்கை
நாட்டில் இன்றைய தினம் தனிமைப்படுத்தல் ஊரடங்கு சட்டம் நீக்கப்பட்ட போதிலும் மக்களின் பொறுப்பான செயற்பாடுகளே ஒக்டோபர் மாதத்தின் நிலைமையை தீர்மானிக்கும் என இராணுவ தளபதி ஷவேந்திர சில்வா (Shavendra Silva) தெரிவித்துள்ளார்.
மக்கள் பொறுப்பற்ற முறையில் செயற்பாட்டால் மீண்டும் கொவிட் தொற்று அதிகரிக்கும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒரு மாதத்திற்கும் அதிக காலம் நாட்டை மூடி கொவிட் தொற்றினை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டோம். மக்கள் நிலைமையை புரிந்து கொண்டு அவதானமிக்க முறையில் செயற்பட வேண்டும்.
நாட்டை மூடியே வைக்க முடியாது. கடந்த காலங்கள் முழுவதுமாக மக்கள் வழங்கிய ஆதரவிற்கமைய தொற்றினை கட்டுப்படுத்த முடிந்தது.
இந்த காலப்பகுதிகளிலும் அதே போன்று அவதானமாக செயற்பட்டால் மாத்திரமே நாட்டை நடத்தி செல்ல முடியும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
அதற்கமைய அரச ஊழியர்களின் பணிகள் இன்று முதல் வழமையான முறையில் நடத்தி செல்லப்படவுள்ளது. மேலும் அத்தியாவசிய சேவைகளுக்கு முன்னுரிமை வழங்குவதற்கு அதிக நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
தொடர்புபட்ட செய்திகள்
இலங்கையில் ஊரடங்கு நீக்கப்பட்டது! - பல்வேறு கட்டுப்பாடுகள் அறிவிப்பு





அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

Numerology: இந்த தேதியில் பிறந்தவங்க ஓவர் நைட்டில் கோடீஸ்வரர் ஆவார்களாம்.. உங்க தேதியும் இருக்கா? Manithan

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri
