ராஜபக்ச குடும்ப உறுப்பினரொருவருக்கு வழங்கப்படவுள்ள முக்கிய பதவி
தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகமாக ராஜபக்ச குடும்ப உறுப்பினர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய விலங்கியல் பூங்காவின் பணிப்பாளர் நாயகம் இஷினி விக்ரமசிங்க தனது பதவியை இராஜினாமா செய்துள்ள நிலையில்,அந்த பதவிக்கு ஜனாதிபதி செயலக சமூக ஊடக முன்னாள் தலைவர் ஷர்மிளா ராஜபக்ச(Sharmila Rajapaksa)நியமிக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஷர்மிளா ராஜபக்ச ஜூன் 2020 இல் ஜனாதிபதியின் சமூக ஊடகத்தலைவராக பணியாற்றிய நிலையில்,பின்னர் அந்த பதவியினை அவர் ராஜினாமா செய்திருந்தார்.
இந்நிலையில், ஷர்மிளா ராஜபக்சவின் நியமனம் தொடர்பான கடிதம் அமைச்சரவை அனுமதிக்காக 18 ஆம் திகதி அனுப்பி வைக்கப்பட்ட நிலையில்,(19ம் , 20 ம் திகதி பொது விடுமுறை என்பதனால் நாளை (21 ம் திகதி) அமைச்சரவை அனுமதியளிக்கும் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 13 மணி நேரம் முன்

ஜாய் கிரிசில்டா பேச்சால் பல கோடி நஷ்டம்.. நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த மாதம்பட்டி ரங்கராஜ் Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

அமெரிக்காவை உலுக்கிய படுகொலையில் உக்ரைனுக்கு பங்கா? எம்.பி ஒருவரின் பேச்சால் அதிர்ச்சி News Lankasri
