கொரோனாவை கட்டுப்படுத்த தவறியமைக்கு கொரோனா தடுப்பு செயலணியே காரணம்! ரணில் குற்றச்சாட்டு
இலங்கையில் கொரோனாவை கட்டுப்படுத்தும் செயற்பாடு தோல்வியடைந்துள்ளதாகவும், இதற்கு கொரோனா தடுப்பு செயலணியே பிரதான காரணமெனவும், நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
இலங்கையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்தி மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டுமெனின், கொரோனா செயலணியிடம் இருந்து அந்த கடமைகளை ஸ்ரீலங்கா அமைச்சரவை பொறுப்பேற்பதோடு, அதற்கென விசேட குழு ஒன்றை அமைக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஸ்ரீலங்கா நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றுகையில் நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க இந்த விடயத்தை வலியுறுத்தியுள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
டெல்டா இன்று உளகளவில் அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. இதனை நாம் கட்டுப்படுத்த வேண்டும். இன்று நாம் கொரோனா தொற்றை கட்டுப்படுத்துவதில் தோல்வியடைந்துள்ளோம்.
எனினும் எம்மால் முடியும். நிதி ஒதுக்கீடுகளுக்குச் செல்ல வேண்டும். முடியுமான இடத்தில் அவற்றை பெற்றுக்கொள்ளுங்கள். அதற்கு நாடாளுமன்றத்தில் பின்னர் அனுமதியை பெற்றுக்கொள்ள முடியும்.
மக்கள் இன்று வைத்தியசாலைகளில் இருக்கின்ற நிலை? இராணுவத்திற்கு சொந்தமான வைத்தியசாலைகள் காணப்படுகின்றன. தகரங்கள் மற்றும் தென்னை மரப்பலகைகளைக் கொண்டு நிர்மாணிக்க முடியும்.
இராணுவமும் பொறியியலாளர் கூட்டுத்தாபனமும் இணைந்து இதனை செயற்படுத்த முடியும். வைத்தியசாலைகளுக்கு அருகில் இதனை அமைக்க முடியும். எங்களுக்கு உதவ முடியும்.
பிரதி சுகாதார பணிப்பாளரின் கருத்துடன் இணங்க வேண்டிய நிலைமை குறித்து நாம் கவலையடைகின்றேன், கொரோனா தொற்று தடுப்பு செயலணி இருக்கும் வரையில் நாம் வேடிக்கை பார்க்க வேண்டியதுதான். இத நடக்கப்போவது இல்லை.
ஆகவே அமைச்சரவை இதனை பொறுப்பேற்று குழு ஒன்றை அமையுங்கள். இந்த சபைக்கு வாருங்கள். அந்த குழுவிற்கு நாம் உதவுகின்றோம். இது இன்று தோல்வியடைந்துள்ளது. சரியாக இதனை முகாமைப்படுத்த முடியாமல் போயுள்ளது.
இதற்கு முன்னர் பலர் இதுத் தொடர்பில் வலியுறுத்தியுள்ளார்கள். இது தேசியப் பிரச்சினை. எமக்கு கொரோனாவிற்கு சிகிச்சையளிப்பதற்காக புதியதொரு ஒதுக்கீடு ஒன்றை மேற்கொள்ள முடியாதா?
கொள்முதல் கொள்கையொன்று இல்லாவிட்டாலும் பரவாயில்லை, இறுதியில் அரச கணக்கு குழுவே இதுத் தொடர்பில் ஆராயும். தாமதிக்க முடியாது.மக்களின் உயிரை காப்பாற்ற வேண்டும். இறுதியில் வந்து ஒதுக்கீடு தொடர்பில் பேச வேண்டாம் என்றும் தெரிவித்துள்ளார்.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 7 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

உலகின் சக்தி வாய்ந்த கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள் - முதலிடத்தில் உள்ள நாடு எது? News Lankasri
