ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி சென்ற பிரதமர்
பிரதமர் மகிந்த ராஜபக்ச (mahinda Rajapaksa) இரண்டு நாள் பயணமாக இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி நகருக்கு இன்று சென்றடைந்துள்ளார்.
திருப்பதி விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமரை, ஆந்திரா மாநிலத்தின் துணை முதலமைச்சர் கே. நாராயணசாமி (K.Narayanaswamy) மற்றும் சித்தூர் மாவட்ட ஆட்சியாளர் எம்.ஹரி நாராயணா(M.Harinarayana)மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச வீதி வழியாக திருப்தி ஏழுமலையான் ஆலயத்திற்கு செல்ல உள்ளதுடன் இரவு மலையில் தங்கியிருக்க உள்ளதாக தெரியவருகிறது.
பிரதமர் தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.
திருப்பதி ஏழுமலை வெங்கடேச பெருமாளின் தீவிர பக்தரான பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இரண்டு நாள் விஜயத்திற்கான சகல ஏற்பாடுகளையும் திருப்பதி தேவஸ்தானம் நிர்வாக சபையினர் மேற்கொண்டுள்ளனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் திருப்பதி ஏழுமலை வெங்கடாசலபதி ஆலயத்திற்கு சென்றிருந்தார்.



50 ஆண்டுகளின் பின் சனி ஜெயந்தியில் உருவாகும் ராஜயோகம்: இந்த ராசிகளுக்கு ராஜ வாழ்க்கை உறுதி! Manithan
ஜனனி செய்த காரியம், குணசேகரன் மீது வருத்தத்தில் ஈஸ்வரி... எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் Cineulagam
பிரித்தானிய அரசியலில் மாறிய காட்சிகள்: வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார் முன்னாள் துணைப்பிரதமர் News Lankasri
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam