ஏழுமலையானை தரிசிக்க திருப்பதி சென்ற பிரதமர்
பிரதமர் மகிந்த ராஜபக்ச (mahinda Rajapaksa) இரண்டு நாள் பயணமாக இந்தியாவின் ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள திருப்பதி நகருக்கு இன்று சென்றடைந்துள்ளார்.
திருப்பதி விமான நிலையத்தை சென்றடைந்த பிரதமரை, ஆந்திரா மாநிலத்தின் துணை முதலமைச்சர் கே. நாராயணசாமி (K.Narayanaswamy) மற்றும் சித்தூர் மாவட்ட ஆட்சியாளர் எம்.ஹரி நாராயணா(M.Harinarayana)மற்றும் மாவட்ட நிர்வாக அதிகாரிகள் வரவேற்றுள்ளனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச வீதி வழியாக திருப்தி ஏழுமலையான் ஆலயத்திற்கு செல்ல உள்ளதுடன் இரவு மலையில் தங்கியிருக்க உள்ளதாக தெரியவருகிறது.
பிரதமர் தனது குடும்பத்தினருடன் திருப்பதி ஏழுமலையான் ஆலயத்தில வழிபாடுகளில் ஈடுபடவுள்ளார்.
திருப்பதி ஏழுமலை வெங்கடேச பெருமாளின் தீவிர பக்தரான பிரதமர் மகிந்த ராஜபக்சவின் இரண்டு நாள் விஜயத்திற்கான சகல ஏற்பாடுகளையும் திருப்பதி தேவஸ்தானம் நிர்வாக சபையினர் மேற்கொண்டுள்ளனர்.
பிரதமர் மகிந்த ராஜபக்ச கடந்த ஆண்டு பெப்ரவரி மாதம் திருப்பதி ஏழுமலை வெங்கடாசலபதி ஆலயத்திற்கு சென்றிருந்தார்.



கொண்டாட்டமான விஷயம், ஒன்று கூடி ஆட்டம் போட்ட சிறகடிக்க ஆசை சீரியல் நடிகர்கள்... வைரலாகும் வீடியோ Cineulagam
ஜீ தமிழ் சீரியல் ரசிகர்களுக்கு வந்த சந்தோஷ செய்தி... மெகா சங்கமம், எந்தெந்த தொடர்கள் தெரியுமா? Cineulagam
ரஞ்சியில் அர்ஜுன் டெண்டுல்கர் 4 ஓட்டங்களில் அவுட்: 6 விக்கெட்டுகளை அள்ளிய வீரர்..சுருண்ட கோவா News Lankasri