பொதுமக்களுக்கு மேலும் அதிகரிக்கும் சுமை! மண்ணெண்ணெய்யின் விலை அதிகரிக்கப்படலாம்
அரசாங்கம் பயன்படுத்தும் விலைச்சூத்திரத்தின்படி, மண்ணெண்ணெய் லீற்றர் ஒன்றுக்கு 275 ரூபாவாக அதிகரிக்கப்பட வேண்டும் என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
மானிய விலையில் மண்ணெண்ணெய் விற்பனை செய்வதால் அரசாங்கத்துக்கு பாரிய நஷ்டம் ஏற்படுவதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
இன்று அதிகாலை 3 மணி முதல் நடைமுறைக்கு வரும் வகையில் எரிபொருள் விலையில் திருத்தம் செய்யப்பட்டிருந்தது.
அதன்படி, நாட்டின் வரலாற்றில் முதல்முறையாக அனைத்து வகையான எரிபொருட்களின் விலைகளும் ரூ.400ஐ தாண்டியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும், ஒரு லீற்றர் மண்ணெண்ணெய் 87 ரூபாவாக தொடர்ந்து விற்பனை செய்யப்படுவதாகவும், மண்ணெண்ணெய்யின் விலை அதிகரிக்கப்பட வேண்டும் என அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அடுத்த கட்டத்திற்கு நகரும் ஈரான் போர்... இஸ்ரேலுக்கு அனுப்பப்பட்ட 6,500 டன் வெடிமருந்துகள் News Lankasri
நான் செத்துப்போகலாம்.. கண்கலங்கி அழும் அண்ணாமலை! சிறகடிக்க ஆசை சீரியலில் அடுத்து நடக்கவிருப்பது இதுதான் Cineulagam