வற் வரி அதிகரிப்பின் எதிரொலி: ஐஸ்கட்டியின் விலையும் அதிகரிப்பு
வற் வரி அதிகரிப்பு காரணமாக இன்று திங்கட்கிழமை (01.01.2024) முதல் ஐஸ்கட்டியின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது.
பெறுமதி சேர் வரி(வற் வரி) 18 சதவீதமாக இன்று முதல் அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில், பல்வேறு பொருட்களின் விலைகள், சேவை கட்டணங்கள் உள்ளிட்டவை அதிகரிக்கப்பட்டுள்ளன.
இதற்கமைய, மீன்களை பாதுகாப்பதற்காக பயன்படுத்தப்படும் ஐஸ்கட்டிகளின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்படுமென உற்பத்தியாளர்கள் தெரிவிக்கின்றனர்.

புது வருடத்தில் நாட்டு மக்களுக்கு அதிர்ச்சி : அடுத்தடுத்து அதிகரிக்கப்படும் பொருட்களின் விலை மற்றும் சேவை கட்டணங்கள்
ஐஸ்கட்டியின் விலை
அறுநூறு ரூபாவாக இருந்த ஒரு கிலோகிராம் ஐஸ்கட்டியின் விலை தற்போது எழுநூறு ரூபாவாக அதிகரிக்கப்படுமெனவும் உற்பத்தியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை, இன்று அதிகாலை 5 மணி (01.01.2024) முதல் நடைமுறைக்கு வரும் வகையில் இலங்கை பெட்ரோலிய கூட்டுத்தாபனம் தனது எரிபொருட்களின் விலைகளை அதிகரித்துள்ளது.
அதேசமயம், இன்று முதல் நடைமுறைக்கு வரும் வகையில் லிட்ரோ எரிவாயுவின் விலையும்,லாஃப் எரிவாயுவின் விலையும் உயர்த்தப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

ஜேவிபி மீண்டும் தன்னை அம்பலப்படுத்தி விட்டது 19 மணி நேரம் முன்

விஜய் டிவி மகாநதி சீரியல் ரசிகர்களுக்கு வந்த குட் நியூஸ்... அட இதுவும் சூப்பர் தான், என்ன தெரியுமா? Cineulagam

Optical illusion: இந்த படத்தின் சூழ்ச்சியை தாண்டி உங்கள் கண்களுக்கு தெரியும் இலக்ககங்கள் என்ன? Manithan

திருமணத்துக்கு முன் காதல் மன்னர்களாக திகழும் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan
