ஒரு பீப்பாய கச்சா எண்ணெயின் விலை 116 டொலர்கள்
உலக சந்தையில் பிரேன்ஞ்ச் ரக கச்சா எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 116 அமெரிக்க டொலர் வரை அதிகரித்துள்ளது. சுமார் ஏழு ஆண்டுகளுக்கு பின்னர், இந்த விலை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உக்ரைன் மற்றும் ரஷ்யா இடையில் ஏற்பட்டுள்ள போர் காரணமாக கச்சா எண்ணெய் விநியோகம் குறைந்துள்ளமை மற்றும் கேள்வி அதிகரித்துள்ளமை இந்த விலையேற்றத்திற்கு காரணம் என கூறப்பட்டுள்ளது.
உலக சந்தையில் எரிபொருளின் விலை அதிகரித்துள்ளமை காரணமாக இலங்கையில் எரிபொருள் இறக்குமதி மற்றும் விநியோகம் ஆகியவற்றில் பாதிப்புகள் ஏற்படும் என்பதுடன் விலைகளும் அதிகரிக்கப்படலாம் என பொருளாதார ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.