ஜனாதிபதி கோட்டாபயவின் முடிவு சரியானது! யாழில் வைத்து ஞானசார தேரர் தகவல்
ஒரு நாடு - ஒரு சட்டம் தொடர்பான ஜனாதிபதி செயலணிக்குழுவின் தலைவராக, ஜனாதிபதி தன்னை நியமித்தது முற்றிலும் சரியான தீர்மானம் என பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொட அத்தே ஞானசார தேரர் (Gnanasara Thero) தெரிவித்துள்ளார்.
ஒரு நாடு - ஒரு சட்டத்தை உருவாக்க பொதுமக்களின் கருத்துக்கள் மற்றும் யோசனைகளை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் நேற்று முன்தினம் வடக்கு மாகாணத்தில் ஆரம்பிக்கப்பட்டது.
இதன் பின்னர் செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே ஞானசார தேரர் இதனை கூறியுள்ளார்.
மக்களுக்கு ஏதுவான ஒரே சட்டம் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்ற காரணத்தினால், பல இனங்கள் நீண்டகாலமாக பாதிக்கப்பட்டுள்ளனர். இது தொடர்பாக கடந்த காலங்களில் நான் தொடர்ந்தும் ஆராய்ந்து வந்தேன். பொறுப்புக் கூற வேண்டியவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தேன்.
இதனால், இந்த பிரச்சினை பற்றி என்னை விட அறிந்தவர்கள் எவரும் இருக்க மாட்டார்கள். என்னை செயலணிக்குழுவின் தலைவராக நியமிக்க ஜனாதிபதி எடுத்த தீர்மானம் முற்றிலும் சரியான தீர்மானம் எனவும் ஞானசார தேரர் குறிப்பிட்டுள்ளார்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 19 மணி நேரம் முன்
காந்திமதியை வீட்டைவிட்டு துரத்திய சக்திவேல், கோமதி தரமான செயல்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
அந்த நடிகை வெளியிட்ட போட்டோ.. எனக்கும் என் குழந்தைகளுக்கும் அவமானம்: விஜய் மீது சங்கீதா அடுக்கடுக்கான புகார் Cineulagam
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
விஜய்க்கு நடிகையுடன் தொடர்பு; விவாகரத்துக்கு காரணமே இதுதான் - குற்றச்சாட்டுகளை அடுக்கிய சங்கீதா News Lankasri