லண்டனில் மர்ம நபரொருவரை சுட்டுக்கொன்ற பொலிஸார்!விசாரணைகள் தீவிரம்
பிரித்தானியாவின் தலைநகரான லண்டனில் கென்சிங்டன் அரண்மனை அருகே அடையாளம் தெரியாத மர்ம நபரை பொலிஸார் சுட்டுக்கொன்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது .
லண்டனின் Kensington-ல் Marloes சாலையில் உள்ள வங்கி மற்றும் புத்தக தயாரிப்பு பகுதியில், மர்ம நபரொருவர் துப்பாக்கியுடன் வந்து அங்கிருந்து பின்னர் வெளியேறியுள்ளார்.
இது குறித்து பொலிஸாருக்கு உடனடியாக தகவல் வழங்கப்பட்டதையடுத்து ஆயுதமேந்திய பொலிஸார் நடத்திய தீவிர சோதனையின் பின்னர் 15 நிமிடங்களுக்குள் குறித்த நபரின் வாகனம் Kensington சாலை மற்றும் அரண்மனை கேட் சந்திப்பில் இருப்பதை கண்டுபிடித்து பொலிஸார் தடுத்து நிறுத்தியுள்ளனர்.
இதன்போது பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் குறித்த நபர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் உயிரிழந்த நபர் தொடர்பான தகவல்களை அறிய பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வரும் நிலையில், பொலிஸார் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டமைக்கான காரணம்? இடையில் நடந்தது என்ன என்பது குறித்து எந்த ஒரு விபரமும் வெளியாகவில்லை என்றும் கூறப்படுகின்றது.
குடும்பத்திற்கு எதிராக மீனா செய்த காரியம், கோபத்தில் கடுமையாக திட்டிய ராஜி.. பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
மருத்துவமனைக்கு வந்த நந்தினி, ரேணுகா பார்த்த ஷாக்கிங் விஷயம், கெஞ்சும் விசாலாட்சி... எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
லண்டனில் தன்னார்வ யூத ஆம்புலன்ஸ்கள் தீ வைப்பு: இது கோழைத்தனம்! பிரதமர் ஸ்டார்மர் கண்டனம் News Lankasri