பொலிஸாரிடம் சிக்கிய ரஞ்சன் ராமநாயக்க தரப்பின் தேர்தல் சுவரொட்டிகள்!
தேர்தல் சட்டத்திற்கு முரணாக விநியோகிக்கப்பட இருந்த ரஞ்சன் ராமநாயக்க தலைமையிலான ஐக்கிய ஜனநாயகக் கட்சியின் ஆயிரத்திற்கும் மேற்பட்ட சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை லிந்துலை பொலிஸார்(Lindula) கைப்பற்றியுள்ளனர்.
ஹட்டன் பகுதியில் இருந்து நுவரெலியா நோக்கிய பயணித்த முச்சக்கர வண்டியொன்றை சோதனையிட்டபோதே குறித்த சுவரொட்டிகள் மற்றும் துண்டுப் பிரசுரங்களை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
குறித்த நடவடிக்கை நேற்று (03.11.2024) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள்
சோதனையின்போது போட்டியிடும் வேட்பாளரின் விருப்ப இலக்கம் கொண்ட சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருந்ததாக பொலிஸார் கூறியுள்ளனர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் நுவரெலியா பகுதிக்கு கொண்டு செல்லப்பட்டு தோட்டபுற பகுதிகளில் காட்சிப்படுத்த திட்டமிடப்பட்டிருந்தமை ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் கைது செய்யப்பட்ட சாரதி, முச்சக்கரவண்டி, சுவரொட்டி மற்றும் துண்டுப் பிரசுரங்களை நுவரெலியா நீதவான் நீதிமன்றில் முன்னிலைபடுத்த பொலிஸார் நடவடிக்கையெடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

முட்டாள் தனமாக எப்போதும் குறைகூறும் பெண் ராசியினர் இவர்கள் தானாம்... யார் யார்ன்னு தெரியுமா? Manithan

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam

சீனா, பாகிஸ்தானுக்கு பெரும் பதற்றம்.... ரூ 2,000 கோடியில் ட்ரோன் உற்பத்தியை மேம்படுத்தும் இந்தியா News Lankasri
