பொருளாதார வீழ்ச்சியின் உச்சகட்டம்: பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான்
பாகிஸ்தானில் தற்போது பெரும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டுள்ளதால் அங்குள்ள பெருமளவிளான பிச்சைக்காரர்கள் அயல் நாடுகளுக்கு தப்பி செல்வதாக தகவல் வெளியாகியுள்ளது.
பாகிஸ்தானில் வரலாறு காணாத விலைவாசி உயர்வு, வேலை பற்றாக்குறை, பெட்ரோல் விலையேற்றம் மற்றும் மின்சார தட்டுப்பாடு ஆகியவற்றால் அங்கு வாழ்வாதாரமே கேள்விக்குறியாகியுள்ளது.
சொந்த நாட்டில் பிழைக்க வழியில்லாததால் பலர் அங்கு பிச்சையெடுக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

இலங்கை வரலாற்றில் முதன்முறையாக உயிர் அச்சுறுத்தல் காரணமாக பதவி விலகியுள்ள நீதிபதி: எம்.ஏ.சுமந்திரன் (Video)
அதன் தொடர்ச்சியாக அந்த பாகிஸ்தானிய பிச்சைக்காரர்கள் கும்பல் கும்பலாக ஈராக், சவூதி அரேபியா உள்ளிட்ட அரபு நாடுகளில் சட்டவிரோதமாகவும் சட்டரீதியாகவும் உள்ளே நுழைந்து அங்கேயும் பிச்சை எடுப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பாகிஸ்தானிடம் கோரிக்கை
இருப்பினும் அரபு நாடுகள் பலவற்றில் பிச்சை எடுப்பது தடை செய்யப்பட்டுள்ளது. பிச்சை எடுப்பவர்களுக்கு சிறை தண்டனை வழங்குவது அங்கு வழக்கம்.
அவ்வாறு சிறையிலடைக்கபட்ட பிச்சைக்காரர்களில் 90 சதவீதத்திற்கும் அதிகமானோர் பாகிஸ்தான் நாட்டை சேர்ந்தவர்கள் என ஒரு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானிலிருந்து மற்றைய அரபு நாடுகளுக்கு செல்லும் விமானங்களில் பிச்சைக்காரர்களே அதிகம் பயணம் செய்யும் நிலையில் இவர்களின் வருகையை தடுக்க நடவடிக்கை எடுக்க சவூதி அரேபியாவும், ஈராக்கும் பாகிஸ்தானிடம் கோரிக்கை வைத்துள்ளன.
இதேவேளை புத்திசாலித்தனமான வழிமுறையை அவர்கள் கையாண்டு உள்ளே வருவதால் தடுப்பதற்கு அந்த நாடுகள் திணறுகின்றதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
குற்றச் செயலில் பாகிஸ்தானியர்கள்
சட்ட ரீதியாக அங்கு நுழைய முயல்பவர்கள், இஸ்லாமியர்களுக்கு மட்டுமே வழங்கப்படும் 'உம்ரா விசா' எனும் அனுமதியை பெற்று அங்கு நுழைவதாகவும் அங்கு வந்தவுடன் சாலைகளில் பிச்சையெடுக்கின்றார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது தவிர இஸ்லாமியர்களின் புனித தலமான மக்கா இருக்கும் சாலைகளில் பல்வேறு குற்றச் செயலில் ஈடுபடும் பெரும்பாலனவர்கள் பாகிஸ்தானியர்கள் எனவும் தெரியவந்துள்ளது.
இந்நிலையில் இந்த விடயம் உலகளவில் பாகிஸ்தானுக்கு அவப்பெயரை ஏற்படுத்தும் விதமாக அமைந்துள்ளது.
ஒரு காலத்தில் பயங்கரவாதிகளை ஏற்றுமதி செய்து வந்த பாகிஸ்தான், தற்போது பிச்சைக்காரர்களை ஏற்றுமதி செய்வதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி வருகின்றமை வியக்கத்தகு விடயமாக பார்க்கப்படுகின்றது.

சீன போர்விமானங்களை பயன்படுத்தி பாகிஸ்தான் இந்தியாவின் ரஃபேல் ஜெட்களை வீழ்த்தியது: அமெரிக்க வட்டாரம் உறுதி News Lankasri

சீன தயாரிப்பு விமானத்தால் பாகிஸ்தான் சுட்டு வீழ்த்திய 2 இந்திய விமானங்கள்: அமெரிக்க நிபுணர்கள் உறுதி News Lankasri
