கோவிட் மரணங்களின் எண்ணிக்கை இன்று மேலும் உயர்வு
கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் ஒருவர் இன்று உயிரிழந்துள்ளார்.
சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
இதற்கமைய நாட்டில் கோவிட் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 484ஆக உயர்வடைந்துள்ளது.
மட்டக்களப்பு- ஏறாவூரைச் சேர்ந்த 65 வயதுடைய பெண் ஒருவரே கோவிட் தொற்றால் மரணித்துள்ளார்.
இது தொடர்பான அறிவித்தல் இன்று இரவு அரச தகவல் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.
அவர் மட்டக்களப்பு மருத்துவமனையில் கோவிட் தொற்றாளியாக கண்டறியப்பட்டு பின்னர் கொழும்பு தொற்று நோயியல் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
இந்தநிலையில் அவரின் இறப்புக்கு கோவிட் மற்றும் நிமோனியா காய்ச்சல் என்பனவே காரணம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அந்த மாதிரி விஷயங்களில் நான் சிக்க விரும்பவில்லை... பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ஓபன் டாக் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam