துறைமுகத்தின் ஊடாக கொரோனாவின் புதிய திரிபு பரவாது
கொரோனா வைரஸ் தொற்றின் புதிய திரிபு துறைமுகத்தின் ஊடாக நாட்டுக்குள் பரவும் சந்தர்ப்பம் இல்லை எனத் துறைமுக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இங்கிலாந்தில் உருவாகி உலகில் பல நாடுகளில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றின் புதிய திரிவு துறைமுகம் அல்லது விமான நிலையங்கள் ஊடாக நாட்டுக்குள் பரவக் கூடும் எனச் சுகாதார அதிகாரிகள் தெரிவித்திருந்தனர்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள துறைமுக சுகாதார அதிகாரிகள், துறைமுகத்திற்கு வரும் கப்பல்களில் உள்ள எவரும் துறைமுகத்திற்குள் வருவதில்லை எனக் கூறியுள்ளனர்.
அத்துடன் துறைமுகத்திலிருந்து கப்பல்களுக்குள் செல்லும் அதிகாரிகள் சுகாதார பாதுகாப்பு உடைகளை அணிந்தே கப்பல்களுக்குள் செல்கின்றனர்.
சுகாதார சட்டதிட்டங்களுக்கு அமைவாகச் செயற்படுவதால், துறைமுகத்தின் ஊடாக புதிய திரிபு நாட்டுக்குள் பரவாது என்பதை உறுதிப்படுத்த முடியும் எனவும் அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.
குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
போட்றா வெடிய, விஜய்யின் ஜனநாயகன் படத்திற்கு கிடைத்த தணிக்கை சான்றிதழ்... ரிலீஸிற்கு தயாரான படம் Cineulagam
நோர்ட் ஸ்ட்ரீம் எரிவாயு குழாய் வெடிக்க வைத்த உக்ரைனியர்: ஜேர்மனி எடுத்துள்ள அதிரடி முடிவு News Lankasri
பிரித்தானிய வரலாற்றில் நடந்த மிகப்பெரிய கொடுமை., தாய்மார்களிடம் மன்னிப்பு கேட்ட பிரதமர் News Lankasri
பிரான்சில் கைது செய்யப்பட்ட ஆட்கடத்தல்காரர்: ஊடகவியலாளர்கள் கண்டுபிடித்த அதிரவைக்கும் தகவல் News Lankasri