வாகனத்தின் மீது நடத்தப்பட வேண்டிய துப்பாக்கிப் பிரயோகம் உயிரைப் பறித்தது எப்படி : அல்லைப்பிட்டி விவகாரம் தொடர்பில் வலுக்கும் சர்ச்சை
யாழ். அல்லைப்பிட்டி பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டுச் சம்பவம், பொலிஸாரின் கண்மூடித்தனமான மற்றும் பொறுப்பற்ற நடவடிக்கை என தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவரான சிரேஷ்ட சட்டத்தரணி ந.சிறீகாந்தா தெரிவித்துள்ளார்.
இந்த உயிரிழப்புக்கு பொலிஸாரே முழுப் பொறுப்பையும் ஏற்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள கண்டன அறிக்கையிலேயே மேற்கண்டவாறு குறிப்பிடப்பட்டுள்ளது.
சட்ட நடவடிக்கை தேவை
அதில் மேலும் தெரிவிக்கப்படுவதாவது,
அல்லைப்பிட்டியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளார். அந்தச் சிறுவன் சந்தேகத்துக்கிடமான வகையில் வாகனத்தைச் செலுத்திச் சென்றிருந்தாலும், அவரைத் துப்பாக்கியால் சுட்டுக் கொல்வதற்குப் பொலிஸாருக்கு எந்தவிதமான சட்ட அதிகாரமும் இல்லை.

ஒரு வாகனத்தை நிறுத்த வேண்டிய தேவை பொலிஸாருக்கு ஏற்பட்டிருப்பின், அவர்கள் வாகனத்தின் சக்கரங்களை நோக்கி மட்டுமே துப்பாக்கிச்சூடு நடத்தியிருக்க வேண்டும்.
அதை விடுத்து, ஒரு உயிரைப் பறிக்கும் வகையில் செயற்பட்டது கண்டிக்கத்தக்கது. இந்தத் துயரமான மரணம் குறித்து முழுமையான மற்றும் நடுநிலையான விசாரணைகள் உடனடியாக முன்னெடுக்கப்பட வேண்டும்.
ஒரு சிறுவனின் மரணத்துக்குக் காரணமான பொலிஸார் எவராக இருந்தாலும், அவர்கள் சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு உரிய தண்டனை வழங்கப்பட வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது.
உள்நாட்டில் கடும் நெருக்கடி... இந்தியாவில் செயல்படத் தொடங்கிய பிரித்தானியப் பல்கலைக்கழகங்கள் News Lankasri
AI தாக்கத்திற்கு தயாராகுங்கள்... அல்லது வெளியேறலாம்: ஊழியர்களுக்கு கூகிள் வலியுறுத்தல் News Lankasri