திட்டமிட்டு உடைக்கப்பட்டதே முள்ளிவாய்க்கால் நினைவு தூபி - ஞா.சிறிநேசன்
முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டதென்பது தமிழ் மக்களின் உணர்வுகளோடு விளையாடும் செயல் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஞா.சிறிநேசன் தெரிவித்துள்ளார்.
இன்று வெள்ளிக்கிழமை மாலை (14) ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.
சொந்த மண்ணில் படுகொலை செய்யப்பட்ட அப்பாவித் தமிழ் மக்களின் நினைவாக முள்ளிவாய்க்கால் நினைவு முற்றத்தில் அமைக்கப்பட்ட நினைவுத் தூபி, இரவு வேளையில் திட்டமிட்டு உடைக்கப்பட்ட சம்பவத்தை கண்டிக்கின்றோம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.