பல கிராமங்களை அச்சுறுத்தி வந்த கும்பல் அதிரடியாக கைது
எம்பிலிபிட்டிய - கொலொன்ன பிரதேசத்தில் பல கிராமங்களில் அச்சுறுத்தலாக இருந்த கும்பலை கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அந்தப் பகுதிகளில் மக்களை மிரட்டி, அச்சுறுத்தி கொள்ளை உள்ளிட்ட பல்வேறு குற்றச்செயல்களில் ஈடுபட்ட கும்பலைச் சேர்ந்த மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த குழுவில் ஏனையவர்களை கைது செய்வதற்கான விசாரணைகள் இடம்பெற்று வருவதாக சிரேஷ்ட பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
கொலொன்ன - வாவல்பென, கும்புருகமுவ, ஹல்மில்ல மற்றும் கொடகும்புர பிரதேசங்களில் மக்களை அச்சுறுத்தி இந்த கொள்ளைச் சம்பவங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
வீடுகளுக்குள் புகுந்து அங்கிருந்தவர்களை மிரட்டி பணம் மற்றும் தங்க நகைகளை கொள்ளையடித்துவிட்டு ஒரு கட்டத்தில் பெண்களை துஷ்பிரயோகம் செய்துள்ளதாக முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஈரான் மீதான அமெரிக்க தரையிறக்க தாக்குதல் மூலோபாயம் எதுவரைக்கும் 19 மணி நேரம் முன்
சிங்கப்பெண்ணே சீரியலில் ஆனந்தியாக நடிக்கும் மனீஷாவின் ஒருநாள் சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
தகாத உறவில் இருந்ததாக கூறிய பத்திரிக்கையாளர்... செருப்பால் அடிப்பேன் என விளாசிய தாமரைச் செல்வி Cineulagam