பொது மக்களுக்கு பொலிஸார் விடுத்துள்ள முக்கிய கோரிக்கை
நாட்டின் தற்போதைய சூழ்நிலையில் பொதுமக்கள் தமது பொறுப்பினை உரிய வகையில் நிறைவேற்ற வேண்டுமென பொலிஸார் கோரிக்கை விடுத்துள்ளனர்.
நாட்டில் தற்சமயம் அமுலிலுள்ள பயணக்கட்டுப்பாட்டை பொலிஸார் கண்காணித்து வருகின்றனர். அதனை மீறுவோர் தொடர்பில் ´1997´ என்ற தொலைபேசி இலக்கத்திற்குப் பொலிஸாருக்கு அறியத் தருமாறு பொலிஸ் ஊடகப் பேச்சாளர், பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண பொதுமக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளார்.
இதேவேளை,நாட்டில் கோவிட் பரவல் அதிகரித்து வருகின்ற நிலையில் குடும்ப உறுப்பினர்களுடன் சொந்த வாகனங்களில் வீட்டில் இருந்து வெளியே செல்லும் போது முகக்கவசம் அணிய தேவையில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கமைய இன்று அடையாளம் காணப்பட்ட கோவிட் தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 2371ஆக அதிகரித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.