இலங்கைக்கு கடன் கொடுத்த இந்தியா! - வைரமுத்து விடுத்துள்ள கோரிக்கை

Sri Lanka Tamil Nadu Vairamuthu
By Murali Jan 24, 2022 12:44 PM GMT
Report

இலங்கைக்கு இந்தியா கொடுத்த கடன் திரும்புமோ இல்லையோ முதலில் தமிழக மீனவர்களின் 105 படகுகள் திரும்ப வேண்டும் என்று கவிஞர் வைரமுத்து வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இலங்கை கடற்படை அத்துமீறி இந்திய எல்லைக்குள் நுழைந்து தமிழக மீனவர்கள் மீது தாக்குதவது, சுட்டுப் படுகொலை செய்வது, கைது செய்வது என்பது பல்லாண்டுகளாக தொடருகிற பெருந்துயராக இருந்து வருகிறது.

கடந்த சில ஆண்டுகளாக தமிழக மீனவர்களின் படகுகளையும் பறிமுதல் செய்து வருகிறது இலங்கை கடற்படை. கடந்த 7 ஆண்டுகளாக இலங்கை கடற்படையால் பறிமுதல் செய்யப்பட்ட தமிழக மீனவர்களின் படகுகள் பராமரிப்பின்றி நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

இந்த படகுகளையாவது மீட்பதற்கு மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளில் எந்த முன்னேற்றமும் ஏற்படவில்லை. இந்த நிலையில் தமிழக மீனவர்களின் 105 படகுகளை இலங்கை அரசு ஏலம் விடப் போவதாக அறிவித்திருக்கிறது.

தமிழக மீனவர்களின் படகுகள் பிப்ரவரி 7-ந் தேதி முதல் ஏலத்துக்கு விடப்பட உள்ளன. பிப்ரவரி 7-ந் தேதி யாழ். காரைநகரில் 65 படகுகளும் பிப்ரவரி 8-ந் தேதி காங்கேசன்துறையில் 5 படகுகளும் பிப்ரவரி 9-ந் தேதி கிராஞ்சியில் 24 படகுகளும், பிப்ரவரி 10-ந் தேதி தலைமன்னாரில் 9 படகுகளும் பிப்ரவரி 11-ந் தேதி கற்பிட்டியில் 2 படகுகளும் காலை 10 மணி முதல் மாலை 4 மணி வரை பகிரங்கமாக ஏலம் விடப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கையின் இந்த அட்டூழிய நடவடிக்கை தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழக மீனவர்களின் படகுகளை ஏலம் விடுவதை கடைசி நேரத்திலாவது மத்திய அரசு தடுத்து நிறுத்த வேண்டும் என்பது தமிழக மீனவர்களின் கோரிக்கை.

இதனை கவிஞர் வைரமுத்துவும் தமது சமூக வலைதளப் பக்கத்தில் வலியுறுத்தி உள்ளார். இது தொடர்பாக கவிஞர் வைரமுத்து தமது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது,

“இலங்கை அரசின் பிடியிலிருக்கும் 105 மீனவப் படகுகளும் மீட்கப்பட வேண்டும் அலைவிரிக்கும் சமுத்திரத்தில் வலைவிரிக்கும் மீனவர்க்குப் படகுதான் கடல் கடவுள்.

அவை உரியவரிடம் ஒப்படைக்கப்பட வேண்டும் இலங்கைக்கு இந்தியா கொடுத்த கடன் திரும்புமோ இல்லையோ முதலில் படகுகள் திரும்ப வேண்டும்.”



மரண அறிவித்தல்

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Brampton, Canada

04 Nov, 2025
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், மாசார் பளை

05 Nov, 2025
மரண அறிவித்தல்

தெல்லிப்பளை, Tellipallai

06 Nov, 2025
மரண அறிவித்தல்

வேலணை வடக்கு, கொழும்பு

06 Nov, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

நெடுங்கேணி, London, United Kingdom

01 Nov, 2025
மரண அறிவித்தல்

துன்னாலை, Croydon, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 6ம் வட்டாரம், கொழும்பு

05 Nov, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
நினைவஞ்சலி
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், புதுக்குடியிருப்பு

07 Nov, 2017
மரண அறிவித்தல்

நயினாதீவு 2ம் வட்டாரம், Jaffna, யாழ்ப்பாணம், Pinner, United Kingdom

03 Nov, 2025
மரண அறிவித்தல்

அச்சுவேலி, Edinburgh, Scotland, United Kingdom

04 Nov, 2025
மரண அறிவித்தல்

கோண்டாவில், ஹற்றன், London, United Kingdom

02 Nov, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, யாழ்ப்பாணம், மண்டைதீவு

06 Nov, 2015
5ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுங்கேணி, பிரான்ஸ், France

02 Nov, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

மானிப்பாய், கொழும்பு

31 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு, உருத்திரபுரம், திருவையாறு, Cergy-Pontoise, France

03 Nov, 2025
மரண அறிவித்தல்

பண்டத்தரிப்பு, தமிழ் ஈழம், Hildesheim, Germany

30 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, நவிண்டில், Toronto, Canada

01 Nov, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US