கம்பஹா மாவட்ட சட்டத்தரணிகள் சம்மேளனம் எடுத்துள்ள முக்கிய தீர்மானம்
கோவிட் பரவலைக் கருத்திற்கொண்டு கம்பஹா மாவட்ட சட்டத்தரணிகள் சம்மேளனம், ஆகஸ்ட் 23 வரை நீதிமன்ற நடவடிக்கைகளிலிருந்து விலகியிருக்கத் தீர்மானித்துள்ளது.
இது தொடர்பில் கம்பஹா மாவட்ட நீதிபதிக்கு கம்பஹா மாவட்ட சட்டத்தரணிகள் சம்மேளனத் தலைவர் லசந்த ஹேவமானே கடிதம் மூலம் அறிவித்துள்ளார்.
நீதிமன்றத்துக்கு வந்து செல்லும் பொதுமக்கள் மற்றும் அரச அதிகாரிகளின் பாதுகாப்புக்கருதி இந்த முடிவைத் தாம் மேற்கொண்டதாக அவர் தமது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார அதிகாரிகளின் அறிவுறுத்தலுக்கு அமைய, கம்பஹா நீதிமன்றத்தில் கட்டமைப்பு வசதிகள் இல்லையென்பதையும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இது தொடர்பில் நேற்று கூடிய சம்மேளனத்தின் அவசரக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாக கம்பஹா மாவட்ட சட்டத்தரணிகள் சம்மேளனத் தலைவர் லசந்த ஹேவமானே தெரிவித்துள்ளார்.
இந்து சமுத்திரம் லங்கா சமுத்திரமாக மாறுமா..! 18 மணி நேரம் முன்
பிரித்தானியாவை நெருக்கும் ஆறாவது வெப்ப அலை... 14 லட்சம் மக்களுக்கு குழாய் நீர் பயன்பாட்டுத் தடை News Lankasri
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri