கொழும்பில் ஹோட்டல்கள் மற்றும் நிறுவனங்கள் எடுத்துள்ள முக்கிய நடவடிக்கை
கொழும்பிலுள்ள பல முன்னணி ஹோட்டல்கள் உட்பட 10 அரச நிறுவனங்கள் முக்கிய தீர்மானம் ஒன்றை எடுத்துள்ளனர்.
நாளாந்தம் அதிகளவான மின்சாரம் பயன்படுத்தப்பட்டு வரும் நிலையில், அதனை குறைக்க நடவடிக்கை எடுத்துள்ளனர். குறித்த நிறுவனங்கள் தாமாகவே முன்வந்து ஜெனரேட்டர்களை நிறுவி அதனை பயன்படுத்த ஆரம்பித்துள்ளனர்.
இந்த நடவடிக்கையால் 100 மெகா வோட்ஸ் மின்சாரத்தை தேசிய கட்டமைப்பினால் சேமிக்க முடிந்துள்ளதாக பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
மின்சாரம் தொடர்பில் ஏற்பட்டுள்ள நிலைமையை தேசிய பிரச்சினையாக கருதி அந்த நிறுவனங்கள் செயற்பட்டிருப்பது முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் ஜெனரேட்டர்களுக்கு தேவையான செலவுகளை அந்த நிறுவனங்களே ஏற்றுள்ளதாக அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நீங்க சூர்யாவா, ரஜினியா? போன் எடுக்க முடியாதா? - திமிராக பேசிய இயக்குனருக்கு விஷ்ணு விஷால் பதிலடி Cineulagam
என் இந்திய மனைவி, இந்த பாகிஸ்தானி., இவர்கள்தான் என் வாழ்க்கையின் இரண்டு முக்கியமான மனிதர்கள்: வான்ஸ் News Lankasri
அதிக நம்பிக்கை துரோகங்களை சந்திப்பவர்கள் இந்த தேதிகளில் பிறந்தவர்கள் தானாம்! ஏன்னு தெரியுமா? Manithan
வசூல் வேட்டையில் சமந்தாவின் 'எங்கள் தங்கம்' திரைப்படம்.. 3 நாட்கள் பாக்ஸ் ஆபிஸ் ரிப்போர்ட் Cineulagam