கருணாவுடன் இணைந்து தோல்வியுற்றவரே சாணக்கியன்! கடும் குற்றச்சாட்டு
நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியனின் கருத்துக்கள் ஒரு அரசியல் முதிர்ச்சி உடையவரின் கருத்துக்கள் அல்ல என ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
சாணக்கியன், ஈழத்து தமிழ் மக்களின் உரிமைகளை பெற்று கொடுக்கக்கூடிய சிந்தனைகளோடு அரசியலுக்கு வந்தவர் அல்ல.
அவர் உண்மையாகவே ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியோடு இணைந்து, கருணா மற்றும் கிழக்கு மாகாணத்தில் அரசு சார்பானவர்களோடு இணைந்து ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து போட்டியிட்டு தோல்வியுற்றவர்.
அதன் பின்னரான காலப்பகுதியிலேயே அவர் தமிழரசுக் கட்சியுடன் இணைந்து கொண்டார் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எமது செய்திச்சேவையின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்தும் குறிப்பிடுகையில்.
செங்கடல் முற்றுகையை எதிர்த்து புதிய கடற்படைக் கூட்டணி: அமெரிக்காவை நம்பாத வளைகுடா நாடுகள் News Lankasri