துறைமுக நகரம் சம்பந்தமான சட்டத்தால் தனி நாடோ சீனாவின் காலனியோ உருவாகாது! - அரசாங்கம் அறிவிப்பு
கொழும்பு துறைமுக நகருக்காக கொண்டு வரப்பட்டுள்ள உத்தேச சட்டத்தின் மூலம் தனி நாடோ, சீனாவின் காலனியோ உருவாகாது என ராஜாங்க அமைச்சர் ஷெயான் சேமசிங்க தெரிவித்துள்ளார்.
முதலீட்டாளர்களுக்கு நட்புறவான சூழலை உருவாக்குவதே இந்த சட்டத்தை கொண்டு வருவதற்கான நோக்கம் எனவும் அவர் கூறியுள்ளார்.
துறைமுக நகர திட்டம் தொடர்பில் அரசாங்கம் கொண்டு வர எதிர்பார்த்துள்ள யோசனைகள் ஊடாக தனியான நாட்டை உருவாக்குவதோ, துறைமுக நகரம் தனியான மாறுவது என்ற எதுவும் நடக்காது. எனினும் முதலீட்டாளர்களை வரவழைக்க கொள்கை ரீதியான மாற்றங்கள் நடக்கும்.
நாட்டுக்கு பொருத்தமான முதலீட்டாளர்களை வரவழைப்பது மற்றும் முதலீட்டாளர்களுக்கு நட்புறவான சூழலை ஏற்படுத்தி கொடுப்பது மாத்திரமே இந்த சட்டத்தின் மூலம் நடக்கும் எனவும் ஷெயான் சேமசிங்க குறிப்பிட்டுள்ளார்.