சட்டமா அதிபரின் பரிந்துரை! வலுக்கும் லசந்த வழக்கு விவகாரம்
புதிய இணைப்பு
ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் வாகன ஓட்டுநர் கடத்தப்பட்ட சம்பவம் தொடர்பாக மூன்று சந்தேக நபர்களை விடுதலை செய்யும் முடிவு தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக, இலங்கையின் சட்டமா அதிபர் கல்கிஸ்ஸ நீதவான் நீதிமன்றத்திற்கு அறிவித்துள்ளார்.
முதலாம் இணைப்பு
லசந்த வழக்குடன் தொடர்புடைய மூன்று பேரை விடுவிக்க சட்டமா அதிபரின் பரிந்துரையை நடைமுறைப்படுத்துவது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவரை மேற்கோள் காட்டியே இந்த செய்தி வெளியாகியுள்ளது.
கொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் ஓட்டுநர் கடத்தப்பட்டது மற்றும் பத்திரிகையாளர் லசந்த விக்ரமதுங்க பயணித்த காரில் ஒரு ஆவணம் காணாமல் போனது தொடர்பாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடமிருந்து 10 ஆம் திகதி பெறப்பட்ட சுருக்க அறிக்கையை சட்டமா அதிபர் திணைக்களம் ஆய்வு செய்ததாகத் தெரிவித்துள்ளது.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம்
இதை உறுதிப்படுத்தும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூத்த அதிகாரி ஒருவர், தொடர்புடைய அறிக்கையை ஆய்வு செய்யும் வரை, மூன்று பேரை விடுவித்து 27 ஆம் திகதி அனுப்பப்பட்ட கடிதத்தின் அறிவுறுத்தல்களை செயல்படுத்துவதை தற்காலிகமாக நிறுத்தி வைக்குமாறு தெரிவிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
லசந்த விக்ரமதுங்கவின் வழக்குடன் தொடர்புடைய மூன்று பேரின் விடுதலைக் கடிதம் குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாகவும், அது நாளை கல்கிஸ்ஸை நீதவான் நீதிமன்றத்தில் ஒப்படைக்கப்படும் என்றும் சட்டமா அதிபர் திணைக்களத்தின் மூத்த அதிகாரி கூறியுள்ளார்.
எனினும், தொடர்புடைய வழக்கில் மூன்று பேரை விடுவித்து சமீபத்தில் அனுப்பப்பட்ட கடிதம் திரும்பப் பெறப்பட்டதாக வெளியான செய்திகள் தவறானவை என்று சட்டமா அதிபர் திணைக்களம் இன்று காலை தெரிவித்துள்ளது.
சம்பவம் தொடர்பான ஏதேனும் புதிய விசாரணை உண்மைகளைப் முறையாடளிக்குமாறு பொலிஸாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது.
லசந்த விக்ரமதுங்க
புதிய ஆதாரங்களை வெளியிடுவதன் அடிப்படையில் குற்றவியல் குற்றச்சாட்டுகளை பரிசீலிப்பதை விலக்குகள் தடுக்காது என்று சட்டமா அதிபர் திணைக்களம் சமீபத்திய அறிவிப்பில் தெரிவித்துள்ளது.
மேலும், சட்டமா அதிபர் சார்பாக அரசு வழக்கறிஞர் ஏஞ்சலோ வான்ஹோஃப் கையொப்பமிட்டு இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.
தாக்கல் செய்யப்பட்ட வழக்கு தொடர்பாக லசந்த விக்ரமதுங்கவின் ஓட்டுநரை விடுவிக்க சட்டமா அதிபர் பிரேம் ஆனந்த உடலகம பரிந்துரைத்துள்ளார்.
அவரது அடையாளம் தொடர்பாக எழுந்த சட்டக் குறைபாடுகள் காரணமாக, குற்றவியல் குற்றச்சாட்டுகளை தாக்கல் செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லை என்று சட்டமா அதிபர் திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
லசந்த விக்ரமதுங்கவின் வாகனத்தில் ஆவணம் ஒன்றைத் தவறாக வைத்ததற்காக கைது செய்யப்பட்ட டான் திஸ்ஸசிறி சுகதபால மற்றும் சிறிமேவன் பிரசன்ன நாணயக்கார ஆகியோரும் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்ய போதுமான ஆதாரங்கள் இல்லாததால் விடுவிப்பு தொடர்பில் அந்த அறிவிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

காணி நிலம் வேண்டும் பராசக்தி 3 நாட்கள் முன்

மற்றொரு ஐரோப்பிய நாடு... 10,000 ரஷ்ய வீரர்கள்: பிரதமர் ஒருவர் வெளியிட்ட அதிர்ச்சி தகவல் News Lankasri

சமீபத்தில் திருமணம் செய்த தொகுப்பாளினி பிரியங்காவிற்கு இப்படியொரு சோகமா?... அவரே வெளியிட்ட போட்டோ Cineulagam
