பருத்தித்துறை புதிய சந்தையில் ஒட்டப்பட்ட அறிவித்தலினால் ஏற்பட்டுள்ள குழப்பம்
பருத்தித்துறை நகர சபையின் புதிய சந்தை நேற்றிலிருந்து தற்காலிகமாக மூடப்படுவதாக பருத்தித்துறை நகரபிதா புதிய சந்தை வாயிலில் இன்று அறிவித்தலை ஒட்டியுள்ளார்.
மரக்கறி சந்தைக்கு வர்த்தகர்கள் நேற்று முன்தினம் வியாழக்கிழமை தாமாகவே சென்று வியாபாரம் செய்வதற்கு சென்றுள்ள நிலையில் ஐந்து மரக்கறி வியாபாரிகள் புதிய சந்தையில் வியாபாரம் மேற்கொண்டு வந்துள்ளனர்.
இந்நிலையில் சபை தவிசாளர் நேற்று வெள்ளிக்கிழமை புதிய சந்தை தற்காலிகமாக பூட்டப்படவுள்ளதாகவும் நவீன சந்தை தொகுதிக்கு செல்லுமாறு கூறியிருந்தார்.

புதிய சந்தை தொகுதி பூட்டு
இந்நிலையில் அவர்கள் பழைய இடமான நவீன சந்தை தொகுதிக்கு செல்லாத நிலையில் இன்று அதிகாலையில் புதிய சந்தை தொகுதி பூட்டு போட்டு பூட்டப்பட்டதுடன் காலை எட்டுமணியளவில் தவிசாளர் குறித்த புதிய சந்தை தொகுதி தற்காலிகமாக மூடப்படுவதாக அறிவித்தல் ஒட்டியுள்ளார்.

எனினும் எஞ்சியுள்ள புதிய மரக்கறி சந்தை வியாபாரிகள் நவீன சந்தை தொகுதிக்கு செல்ல மாட்டோம் என சந்தை வாயிலிலேயே உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
எதிர்பார்க்காத போட்டியாளர் பிக் பாஸ் 9 வீட்டிலிருந்து வெளியேற்றம்.. அதிர்ச்சியில் ரசிகர்கள் Cineulagam