சுகாதார விதிமுறைகள் தொடர்ந்தும் கடுமையாக அமுல்படுத்தப்படும்
கோவிட் வைரஸ் தொற்றை கட்டுப்படுத்தும் நோக்கில் அமுல்படுத்தப்பட்டுள்ள சுகாதார விதிமுறைகள் தொடர்ந்தும் கடுமையாக அமுல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் - சிங்கள புத்தாண்டு காலத்தின் பின்னரும் சுகாதார விதிமுறைகள் கடுமையாக அமுல்படுத்தப்படும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
புத்தாண்டின் பின்னர் மக்கள் இன்றைய தினம் பல்வேறு செயற்பாடுகளை மேற்கொள்ள உள்ளதாகவும், இதன்போது சுகாதார விதிமுறைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட வேண்டுமெனவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
முகக் கவசங்கள் எல்லா நேரங்களிலும் அணிந்திருக்க வேண்டும் எனவும், சமூக இடைவெளி பேணப்பட வேண்டுமெனவும் தெரிவித்துள்ளார்.
புத்தாண்டு கொண்டாட்ட நிகழ்வுகளுக்கு முன் அனுமதி பெற்றுக்கொண்டிருக்க வேண்டியது இன்றியமையாதது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சுற்றுலாக்கள் மற்றும் வெளியிடங்களுக்கான பயணங்களின் போது சுகாதார வழிகாட்டல்களை முழு அளவில் பின்பற்ற மக்கள் நடவடிக்கை எடுக்க வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.