அரசாங்கம் மூன்றாக பிளவடையும்! ஐக்கிய மக்கள் சக்தி உறுதி
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணி தலைமையிலான இந்த அரசாங்கம் மூன்றாக பிளவடையும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
சூழ்ச்சி செய்து ஆட்சியை கைப்பற்றும் எவ்வித நோக்கமும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அவர் தொடர்ந்தும் கூறுகையில்,
இந்த அரசாங்கத்தை விரட்டியடிப்பதற்கு மக்கள் ஆயத்தமாக இருக்கின்றார்கள். எனினும் எங்களுக்கு அவசரமில்லை. பொய்யாக தலைகளை மாற்றி, சூழ்ச்சி செய்து ஆட்சியை கைப்பற்ற நாம் விரும்பவில்லை.
மக்களை ஏமாற்றி ஆட்சியை பிடிக்க நாம் தயாரில்லை, ஜனநாயக கட்டமைப்பின் பிரகாரம் தேர்தலின் ஊடாகவே நாம் ஆட்சியை கைப்பற்றுவோம். எதிர்வரும் ஆகஸ்ட் மாதமளவில் இந்த அரசாங்கம் மூன்றாக பிளவடையும்.
தனது சீடர்கள் என பெசில் ராஜபக்ச நினைத்துக் கொண்டிருக்கும் 50க்கும் மேற்பட்டவர்கள் அரசாங்கத்தை விட்டு வெளியேறி எதிர்க்கட்சியுடன் இணைந்து கொள்வார்கள். அவர்கள் எங்களுடன் இணைந்து கொள்வார்கள் நான கூறவில்லை.
எனினும் அவர்கள் எதிர்க்கட்சியில் இணைந்து கொள்வார்கள்.
நாட்டை சீரழித்துக் கொண்டிருக்கும் குடும்பத்தை தேர்தல் ஒன்றின் மூலமே நாம் விரட்டியடிப்போம் என எஸ்.எம். மரிக்கார் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவால் ஈரானில் ஒரு ஆட்சி மாற்றத்தை ஏற்படுத்த முடியுமா..! 20 மணி நேரம் முன்
வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri