நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையை தவிர்ப்பதற்கு அரசாங்கம் முடிவு
வெளிநாட்டு நாணய பிரச்சினைகள் காரணமாக இலங்கையில் இருந்து எரிபொருள் தாங்கிக்கப்பல் ஒன்று திருப்பி விடப்பட்டதைத் தொடர்ந்து நாடு எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்ளும் நிலையில் இருப்பதாக அண்மையில் வெளியான செய்தியை எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பில நேற்று நிராகரித்தார்.
ஊடகவியலாளர் சந்திப்பின் போது உரையாற்றிய அவர், நாடு எரிபொருள் பற்றாக்குறையை எதிர்கொள்கிறது என்பதில் உண்மை இல்லை என்று கூறினார்.
அந்நிய செலாவணி பற்றாக்குறையால் எரிபொருள் விநியோகஸ்தர்களுக்கு பணம் கொடுக்கப்படவில்லை என்ற காரணத்தினால், எரிபொருள் கப்பல் திருப்பி விடப்பட்டுள்ளதாக சில ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன என்று அவர் கூறினார்.
அத்துடன், எதிர்க்கட்சி உறுப்பினர்கள் தவறான ஊடக அறிக்கைகளின் அடிப்படையில் அறிக்கைகளை வெளியிடுவதாக அமைச்சர் கம்மன்பில கூறினார்.
இவ்வாறு பொய்யான வதந்திகளை பரப்பியவர்கள், எண்ணெய் கப்பல் எந்த நிறுவனத்தைச் சேர்ந்தது என்றும் கப்பலின் பெயர் என்ன என்பது தொடர்பாகவும் தகவலை வெளியிட வேண்டும் என்று அவர் சவால் விடுத்தார்.
இலங்கையில் போதுமான எரிபொருள் இருப்பு உள்ளது, அதாவது இன்னும் 27 நாட்களுக்கு பெட்ரோலும், 24 நாட்களுக்கு போதுமான டீசலும் உள்ளது என்று அமைச்சர் வலியுறுத்தினார்.
தேவைகள் பூர்த்தி செய்ய போதுமான எரிபொருள் இருப்பு நாட்டில் இருக்கும்போது இதுபோன்ற தவறான ஊடக அறிக்கைகள் உருவாக்கப்படுவது உண்மையில் ஏமாற்றமளிக்கிறது என்று அவர் மேலும் கூறினார்.
நாட்டில் எரிபொருள் பற்றாக்குறையைத் தவிர்ப்பதற்கு அரசாங்கம் தன்னால் முடிந்த அனைத்தையும் செய்துள்ளது என்று அவர் கூறினார்.