வெள்ளவத்தை சிறுவர் காப்பகத்தில் இருந்த சிறுமி தப்பியோட்டம்
கொழும்பு வெள்ளவத்தை பொலிஸ் பிரிவில் டப்ளியூ.ஏ.டி.சில்வா மாவத்தையில் அமைந்துள்ள சிறுவர் காப்பகத்தின் பொறுப்பில் இருந்து வந்த சிறுமி அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெள்ளவத்தை லங்காதார சிறுவர் காப்பகத்தில் இருந்த இந்த சிறுமி மூன்று தினங்களுக்கு முன்னர் ரண்முத்துகல தடுப்பு முகாமில் இருந்த நிலையில், சிறுவர் காப்பகத்தில் கையளிக்கப்பட்டிருந்தார்.
15 வயதான இந்த சிறுமி தியகடுவ, மஹகம பிரதேசத்தை சேர்ந்தவர் எனவும் சம்பவம் தொடர்பாக விசாரணைகளை நடத்தி வருவதாகவும் வெள்ளவத்தை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.