கனடாவில் வீடு புகுந்து பெண் ஒருவரை கடத்தி சென்ற ஆபத்தான மர்ம கும்பல்
கனடாவில் வாசகா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் புகுந்த கும்பலொன்று பெண் ஒருவரை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்ராறியோ பிராந்திய பொலிஸார் குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர். இரவு சுமார் 8.30 மணியளவில் டிரெயில்வுட் பகுதியில் இருந்து உதவி கோரி அழைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிஸாரிடம், மூவர் கும்பல் ஒன்று வீடு புகுந்து 37 வயதுடைய பெண் ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்ட பெண்ணின் பெயர் Elnaz Hajtamiri எனவும், அந்த மூவர் கும்பல் வெள்ளை நிற SUVல் மாயமானதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த கும்பலிடம் ஆயுதம் இருக்கலாம் எனவும் அவர்கள் ஆபத்தானவர்களாக இருக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால்பெண்ணின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும் பொலிஸார் கவலை தெரிவித்துள்ளனர்.
தமிழன் பட பாணியில் நடைபெற்ற சம்பவம் - தமிழக அரசின் கடனை அடைக்க பணம் வழங்கிய வழக்கறிஞர் News Lankasri
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
பிரித்தானிய அரசியலையே மாற்றும் என எதிர்பார்க்கப்படும் தேர்தல்: வாக்களிப்பு துவங்கியது... News Lankasri
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri