கனடாவில் வீடு புகுந்து பெண் ஒருவரை கடத்தி சென்ற ஆபத்தான மர்ம கும்பல்
கனடாவில் வாசகா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் புகுந்த கும்பலொன்று பெண் ஒருவரை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்ராறியோ பிராந்திய பொலிஸார் குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர். இரவு சுமார் 8.30 மணியளவில் டிரெயில்வுட் பகுதியில் இருந்து உதவி கோரி அழைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிஸாரிடம், மூவர் கும்பல் ஒன்று வீடு புகுந்து 37 வயதுடைய பெண் ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்ட பெண்ணின் பெயர் Elnaz Hajtamiri எனவும், அந்த மூவர் கும்பல் வெள்ளை நிற SUVல் மாயமானதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த கும்பலிடம் ஆயுதம் இருக்கலாம் எனவும் அவர்கள் ஆபத்தானவர்களாக இருக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால்பெண்ணின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும் பொலிஸார் கவலை தெரிவித்துள்ளனர்.
போதைப்பழக்கத்தில் சிக்கிய கேப்டன்: இனி அணியில் எடுக்க மாட்டோம்..கிரிக்கெட் வாரியம் திட்டவட்டம் News Lankasri
கோவை மாணவி துஷ்பிரயோகம்: முதலில், அந்தப் பெண் தவறு: இசையமைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கருத்து News Lankasri
முத்துவிடமே நேரடியாக சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
மனைவிக்கு மயக்க மருந்து கொடுத்துக் கொன்ற மருத்துவர்: ரகசியக் காதலிக்கு அனுப்பிய செய்தி சிக்கியது News Lankasri