கனடாவில் வீடு புகுந்து பெண் ஒருவரை கடத்தி சென்ற ஆபத்தான மர்ம கும்பல்
கனடாவில் வாசகா கடற்கரை பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு ஒன்றில் புகுந்த கும்பலொன்று பெண் ஒருவரை கடத்திச் சென்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஒன்ராறியோ பிராந்திய பொலிஸார் குறித்த தகவலை வெளியிட்டுள்ளனர். இரவு சுமார் 8.30 மணியளவில் டிரெயில்வுட் பகுதியில் இருந்து உதவி கோரி அழைக்கப்பட்டதாகவும் தெரிவித்துள்ளனர்.
தகவலையடுத்து சம்பவப்பகுதிக்கு விரைந்த பொலிஸாரிடம், மூவர் கும்பல் ஒன்று வீடு புகுந்து 37 வயதுடைய பெண் ஒருவரை கடத்திச் சென்றுள்ளதாக தெரிவித்துள்ளனர்.
கடத்திச் செல்லப்பட்ட பெண்ணின் பெயர் Elnaz Hajtamiri எனவும், அந்த மூவர் கும்பல் வெள்ளை நிற SUVல் மாயமானதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
குறித்த கும்பலிடம் ஆயுதம் இருக்கலாம் எனவும் அவர்கள் ஆபத்தானவர்களாக இருக்க வாய்ப்புள்ளதாகவும், இதனால்பெண்ணின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படலாம் எனவும் பொலிஸார் கவலை தெரிவித்துள்ளனர்.
அபிநய் இறந்துவிட்டார் என கூறியபோது உறவினர்கள் செய்த செயல்... பிரபலம் பகிர்ந்த சோகமான தகவல் Cineulagam
10 ஆண்டுகள் கழித்து சொந்த ராசியில் நுழையும் ராகு! பணத்தை மூட்டைகளில் அள்ளப்போகும் 3 ராசிகள் Manithan
குணசேகரன் சதித்திட்டம், சக்தியிடம் ஜனனி சொன்ன வார்த்தை.. எதிர்நீச்சல் தொடர்கிறது நாளைய ப்ரோமோ Cineulagam