வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்ட கும்பல்! பிரதான சந்தேக நபர் கைது
யாழ்ப்பாணத்தில் அண்மைக்காலமாக வாள்வெட்டு வன்முறையில் ஈடுபட்டு வந்த கும்பலின் பிரதான சந்தேக நபர் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
தாவடியை சேர்ந்த 23 வயதான இளைஞர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
வீடுகளுக்குள் புகுந்து வன்முறை

அண்மையில் மானிப்பாயில் இருவேறு வீடுகளுக்குள் புகுந்து பெறுமதியான பொருட்களை உடைத்து சேதப்படுத்தியமை மற்றும் கடந்த வருடம் அரியாலை மற்றும் பளையில் வீடுகளுக்குள் புகுந்து அட்டூழியத்தில் ஈடுபட்ட சம்பவங்கள் தொடர்பில் குறித்த இளைஞனை யாழ். மாவட்ட குற்றத்தடுப்பு பொலிஸார் தொடர்ச்சியாக தேடி வந்துள்ளனர்.
குறித்த சந்தேக நபருக்கு மோட்டார் சைக்கிள் வழங்கிய ஒருவர் மற்றும் வன்முறையில் ஈடுபட்ட இருவர் என மூவர் கடந்த மாதம் கைது செய்யப்பட்டுள்ளனர்.
பொருட்கள் மீட்பு

இதற்கமைய அவர்கள் வழங்கிய தகவலின் அடிப்படையில் முதன்மை சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
சந்தேக நபரிடமிருந்து 3 வாள்கள், மோட்டார் சைக்கிள் என்பன பொலிஸாரால் கைப்பற்றப்பட்டுள்ளன.
இந்த வன்முறை சம்பவங்களுடன் தொடர்புடைய மேலும் ஐவர் தேடப்பட்டு வருவதாகவும்
பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.
ஈழத் தமிழர்களின் விடுதலைக்கான பாதையை யார் வழிநடத்துவது.. 14 மணி நேரம் முன்
விஜய்க்கு நடிகை உடன் தொடர்பு.. 2021ல் தொடங்கிய சண்டை! விவாகரத்து மனுவில் சங்கீதா குறிப்பிட்ட அதிர்ச்சி தகவல் Cineulagam
ட்ரம்ப் எந்த நேரத்திலும் முடிவெடுக்கலாம்... ஈரானில் இருந்து தூதரக அதிகாரிகளை வெளியேற்றிய பிரித்தானியா News Lankasri
ஆளுங்கட்சிக்கு மரண அடி கொடுத்துள்ள தேர்தல் முடிவுகள்: பிரதமர் ராஜினாமா செய்ய வலியுறுத்தல் News Lankasri
புதிய நிகழ்ச்சியை தொடங்கியுள்ள விஜய் டிவி... முதலில் கலந்துகொள்ளும் பிரபலங்கள் யார் பாருங்க Cineulagam
ஐந்து வருடமாக ஏற்பட்ட துரோகம், மன உளைச்சல்! விஜய் மீது அடுக்கடுக்காக சங்கீதா வைத்த குற்றச்சாட்டு Manithan