கட்சியின் கதவு எப்போதும் திறந்தே இருக்கிறது! மைத்திரி தரப்பு விடுத்துள்ள அழைப்பு
கட்சியுடன் முரண்பட்டு, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் இருந்து விலகிச் சென்ற அனைவரும் கட்சிக்குள் மீண்டும் திரும்பி வருவதற்காக கட்சியின் கதவுகள் திறந்திருப்பதாக அந்த கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க (Duminda Dissanayake)தெரிவித்துள்ளார்.
இதனால், கட்சியை விட்டு சென்ற அனைவரும் தமது தாய் வீட்டுக்கு வர வேண்டும் எனவும் அவர் அழைப்பு விடுத்துள்ளார்.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இருப்பவர்களுக்கும் தமது தாய் வீடு எது என்பது நினைவில் இருக்கும் எனவும் அவர் கூறியுள்ளார்.
அனுராதபுரம் மிகிந்தலையில் நடைபெற்ற ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தொகுதி அதிகார சபையின் கூட்டத்தில் உரையாற்றும் போதே துமிந்த திஸாநாயக்க இதனை குறிப்பிட்டுள்ளார்.
சிலர் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை துச்சம் என மதிக்கின்றனர். இவர்கள் எவராலும் கட்சியை பலவீனப்படுத்த முடியாது. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அளவுக்கு நாட்டிற்கு வெற்றிகளை தேடி கொடுத்த கட்சி எதுவுமில்லை.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவராகவே மகிந்த ராஜபக்ச நாட்டிற்கு போர் வெற்றியை பெற்றுக்கொடுத்தார்.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்சவின் வெற்றிக்காக மாத்திரமல்லாது பொதுத் தேர்தலில் வெற்றிப் பெறவும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, கூட்டணிக் கட்சியாக பொதுஜன பெரமுனவுக்குள் வந்தது.
உடன்படிக்கையில் கையெழுத்திட்டே கட்சி கூட்டணிக்குள் சென்றது. இதனால், அரசாங்கத்திற்குள் இருந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு தனித்து அரசியலில் ஈடுபடும் உரிமையுள்ளது.
இந்த உரிமையை எவரும் தடுத்து விட முடியாது. அத்துடன் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை வலுப்படுத்தும் வேலைத்திட்டங்களையும் எவரும் தடுக்க முடியாது எனவும் துமிந்த திஸாநாயக்க குறிப்பிட்டுள்ளார்.
இந்துமாகடல் அரசியலில் தமிழர் வகிபாகம் என்ன..! 2 நாட்கள் முன்
மீண்டும் சன் டிவி சீரியலில் என்ட்ரி கொடுத்த பாண்டவர் இல்லம் சீரியல் வேதநாயகி... எந்த தொடர்? Cineulagam
128 ஆண்டுக்கு பின் ஒலிம்பிக்கில் கிரிக்கெட் - ஆனால் பாகிஸ்தான், இலங்கைக்கு வாய்ப்பில்லை News Lankasri
நடிகர் நெப்போலியன் வீட்டில் விசேஷம்! மகன் தனுஷ் - அக்ஷயா தம்பதிக்கு குவியும் வாழ்த்துக்கள் Manithan
சக்தியை முடித்த சந்தோஷத்தில் குணசேகரன், என்ன செய்வது என்ற பதற்றத்தில் ஜனனி...எதிர்நீச்சல் தொடர்கிறது ஸ்பெஷல் புரொமோ Cineulagam
க்ரிஷுடன் அமர்ந்து ரோஹினி திதி கொடுப்பதை நேரில் பார்த்த மீனா, அடுத்த நொடியே செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை புரொமோ Cineulagam