பிரித்தானியாவில் தமிழர் சார்பில் அம்பிகையின் அறப் போராட்டத்திற்கு கிடைத்த முதல் வெற்றி!

on behalf of tamils in britain!
By Independent Writer Mar 11, 2021 05:54 AM GMT
Report

இலங்கை யுத்தத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மற்றும் இனப்படுகொலைக்கு உள்ளான மக்கள் சார்பில், குறிப்பாகத் தமிழர்கள் சார்பில், திருமதி அம்பிகை செல்வகுமார் லண்டனில் ஆரம்பித்த உணவு தவிர்ப்புப்போராட்டத்தின் விளைவாக, தமிழர் சார்பில் அவர் முன்வைத்த நான்கு கோரிக்கைகளையும் பிரித்தானியத் தொழிற்கட்சி அங்கீகரித்துள்ளதுடன், உடன் நடவடிக்கை எடுக்குமாறு ஆளும் கட்சியை வலியுறுத்தியுள்ளது.

தொழிற்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஸ்ரிபன் கினோக் (Shadow Minister,Foreign and Commonwealth Affairs) அவர்கள் பிரித்தானியாவின் தலைமையில் மார்ச்24 ஆம் திகதி ஐ.நா மனிதவுரிமைகள் பேரவையின் ஒப்புதலிற்காகத் தாக்கல் செய்யப்பட்டுள்ள இலங்கை மீதான வரைவுத் தீர்மானம் தொடர்பில் தனது அதீத அதிருப்தியையும் வரைவுத்தீர்மானத்தில் உள்ளடக்கப்பட்ட விபரங்கள் தெளிவற்றதாகவும் போதுமானதாகவும் இல்லை எனவும் சுட்டிக்காட்டி ஆசியப்பிராந்தியத்திற்கான அமைச்சரிற்கு (Foreign and Commonwealth Office, UK)கடிதமொன்றை அனுப்பியுள்ளார்.

மேலும் அவர் வரைவுத் தீர்மானத்தில் பின்வரும் விடயங்களைக் கருத்தில் எடுக்குமாறு கேட்டுக்கொண்டார்.

• 27 ஜனவரி ஐ.நா மனித உரிமைகள் ஆணையாளரினால் வெளியிடப்பட்ட அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்ட விடயங்களை உள்ளடக்கத்தவறியுள்ளதாகவும், இலங்கை அரசாங்கம் மற்றும் இராணுவத்தின் நடவடிக்கைகளிற்கு உலகளாவிய அதிகார வரம்புக் கொள்கை பயன்படுத்தப்பட வேண்டும் என்பதனை உறுதிப்படுத்தப் பிரித்தானிய அரசு வரைவுத் தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளுமா? எனவும்

• IIIM அவசியமானது என்ற உண்மைத்தன்மையைப் பிரதிபலிக்கும் வகையில் வரைவுத் தீர்மானத்தில் திருத்தம் செய்யுமாறு கேட்டுக்கொள்வதாகவும்

• ஐ.நா பாதுகாப்புக் குழுவிற்கான பிரித்தானிய அரசாங்கத்தின் அணுகுமுறை அதன் நிரந்தர உறுப்பினர்களில் இருவரின் வீட்டோ அதிகாரங்களினால் தீர்மானிக்கப்படக்கூடாது எனவும் சுட்டிக்காட்டியுள்ளதோடு இலங்கை விடயத்தினை சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்குப் பரிந்துரைக்க வேண்டும் என்பதனை உள்ளடக்கத் தவறிவிட்டதாகவும் எனவே அதனை உள்ளடக்க வேண்டியும்

• இலங்கை அதிகாரிகளின் அதிகரித்துவரும் அத்துமீறிய செயற்பாடுகளிலிருந்து மனித உரிமை ஆர்வலர்களைப் பாதுகாப்பதற்கான உறுதியான நடவடிக்கைகளிற்கு இந்தத்தீர்மானம் வழிவகுக்கின்றது என்பதனை உறுதிப்படுத்தப் பிரித்தானிய அரசாங்கம் என்ன நடவடிக்கைகளை எடுக்கும் எனவும்

• வரைவுத்தீர்மானத்தில் இலங்கை அரசாங்கத்தின் பொறுப்புக் கூறலிற்கான கால எல்லை18 மாதங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இது ஏற்றுக்கொள்ள முடியாத நீண்ட காலமாக இருப்பதனால் 6 மாதங்களிற்குள் பொறுப்புக்கூறல் குறித்த அறிக்கையைக் கோருவதற்கு வரைவுத் தீர்மானத்தில் திருத்தம் மேற்கொள்ளப் பரிந்துரை செய்வதாகவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளார்.

இலங்கையில் நடந்த வன்முறைகளால் பாதிக்கப்பட்டவர்களிற்கும் தப்பிப் பிழைத்தவர்களிற்கும் பிரித்தானிய அரசாங்கம் கடன்பட்டுள்ளதாகவும் தற்போதைய வரைவினை மேலே முன்மொழியப்பட்ட மாற்றங்களை உள்ளடக்கி விரைவில் மாற்றியமைக்குமாறு கேட்டுக்கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

அம்பிகை செல்வகுமார் அவர்களின் உணவுத் தவிர்ப்புப் போராட்டம் 10 நாளை அடைந்திருக்கும் நிலையில், தமிழ்மக்கள், மனித உரிமை ஆர்வலர்கள் அனைவரும் ஒன்றிணைந்து வழங்கிய அழுத்தங்களே இந்த முன்னேற்றத்துக்கான காரணங்களாகும். இதனால் இது அவரின் அகிம்சைப் போராட்டத்திற்குக் கிடைத்த முதல் வெற்றி எனக் கருதலாம்.


GalleryGalleryGallery
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, கன்னாதிட்டி, Velbert, Germany, Brampton, Canada

04 Nov, 2022
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சுன்னாகம், Neuilly-sur-Marne, France

12 Nov, 2024
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Woodstock, Canada

01 Nov, 2024
நன்றி நவிலல்

வேலணை 5ம் வட்டாரம், Mississauga, Canada

01 Oct, 2025
மரண அறிவித்தல்
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், Vaughan, Canada

30 Oct, 2019
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில், Toronto, Canada

31 Oct, 2022
5ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, பாண்டியன்குளம், Toronto, Canada

30 Oct, 2020
8ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, வெள்ளவத்தை

30 Oct, 2017
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புதுக்குடியிருப்பு 6ம் வட்டாரம், சென்னை, India

31 Oct, 2024
4ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Waltrop, Germany

01 Nov, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பன் மேற்கு, கரம்பன், கொழும்பு, சுவிஸ், Switzerland, கொழும்பு சொய்சாபுரம்

01 Nov, 2023
மரண அறிவித்தல்

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
மரண அறிவித்தல்

அனலைதீவு 3ம் வட்டாரம், Oberburg, Switzerland

28 Oct, 2025
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

கிளிநொச்சி, அனலைதீவு, Brampton, Canada

29 Oct, 2023
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Jaffna, வேலணை மேற்கு 8ம் வட்டாரம், Northolt, United Kingdom

28 Oct, 2025
11ம் ஆண்டு நினைவஞ்சலி

மலேசியா, Malaysia, சரவணை மேற்கு, வெள்ளவத்தை

31 Oct, 2014
மரண அறிவித்தல்
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

நெல்லியடி, London, United Kingdom

03 Oct, 2025
நன்றி நவிலல்
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
மரண அறிவித்தல்

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US