இலங்கை அரசுக்கு எதிராக ஐ.நா சரித்திரத்தில் இடம்பெற்ற முதல் சம்பவம்
சிங்களவர்களின் தூதுவராக,அடிவருடியா செயற்படும் எம்.ஏ சுமந்திரனுக்கு ஐ.நாவில் எந்தவிதமான அங்கீகாரமும் கிடையாது என உலக தமிழர் இயக்கத்தின் மக்கள் தொடர்பாளர் பிரிவிற்கு பொறுப்பான நிஷா பீரிஸ்( Nisha Peiris)தெரிவித்துள்ளார்.
எமது ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
இலங்கையிலிருந்து ஐ.நாவிற்கு கிடைக்கப்பெற்ற அறிக்கை இரண்டு தரப்பாக காணப்படுகின்றது. அதில் அதிகமாக சிங்களவர்,முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பான அதிகமான அறிக்கைகள் அனுப்பப்பட்டிருக்கின்றது.
முஸ்லிம் சமூகத்திடமிருந்து தமிழர்கள் அதிகம் கற்றுக்கொள்ள வேண்டியுள்ளது. தமிழ்த்தேசிய கூட்டமைப்பினரால் ஐ.நாவிற்கு அனுப்பப்பட்ட அறிக்கைகள் தொடர்பில் தொடர்ச்சியாக விமர்சனங்களை முன்வைப்பது செத்த பாம்பிணை மீண்டும் மீண்டும் அடிப்பதற்கு சமம்.
மேலும் தமிழ் மக்கள் தொடர்ச்சியாக தமிழ் பிரதிநிதிகள் மீதான விமர்சனங்களை முன்வைக்கும் வலைக்குள் சிக்கியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
தொடர்புடைய செய்திகள்....
ஐ.நா பொதுச்சபையின் 76ஆவது கூட்டத்தொடர் இன்று ஆரம்பம்
இந்த இலங்கை கிரிக்கெட் வீரரே என் குழந்தைக்கு தந்தை - நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த பெண் News Lankasri