கோட்டாபயவை விட அதிகாரத்துடன் செயற்பட்ட அரச அதிகாரிக்கு நேர்ந்த கதி
இலங்கை ஜனாதிபதி ஒருவரின் சம்பளத்தை விட 40 மடங்குக்கும் அதிகமாக பெற்ற அரசுக்கு சொந்தமான நிறுவனத்தின் தலைவர் பதவியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.
அரசுக்கு சொந்தமான நிறுவனத்துடன் இணைந்து இரண்டு நிறுவனங்களிடமிருந்து சம்பளம் மற்றும் மேலதிக கொடுப்பனவாக அவர் மாதத்திற்கு 4 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமாக பெற்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இது தொடர்பில் எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள் சமீபத்தில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியிருந்தனர்.
இந்த விடயத்திற்கு பொறுப்பான அமைச்சரின் கடுமையான எதிர்ப்பையும் மீறி அவர நீக்கப்பட்டுள்ளார். நீக்கப்பட்ட நிறுவன தலைவர் மற்றொரு அரச நிறுவனத்தின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் ஜனாதிபதியாக பதவியில் இருக்கும் ஒருவருக்கு மாதாந்த சம்பளமாக 97,500 ரூபா சம்பமாக வழங்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
பிரித்தானியாவில் திருமணம்... குடும்பம் ஒன்று விமான நிலையம் செல்லும் வழியில் கோர சம்பவம் News Lankasri
ஓமான் குறுக்கிட்டால் மொத்தமாக அழிப்போம்... ஈரான் போர் தொடர்பில் ட்ரம்ப் பகிரங்க மிரட்டல் News Lankasri