வயோதிபர்களுக்கே அதிகளவு ஆபத்து – இராஜாங்க அமைச்சர் தகவல்
கோவிட் பெருந்தொற்று காரணமாக வயோதிபர்களுக்கே அதிகளவு ஆபத்து காணப்படுகின்றது என இராஜாங்க அமைச்சர் சுதர்சனி பெர்னாண்டோபுள்ளே தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் சற்று முன்னர் இந்தகத் கருருத்தை வெளியிட்டார்.
இளையவர்களை விடவும் வயது முதிர்ந்தவர்கள் மரணிப்பதற்கான வாய்ப்பு அதிகம் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கையில் கோவிட் காரணமாக இளையோருக்கு ஆபத்து அதிகம் என பேசப்பட்ட போதிலும், உயிரிழப்பு குறித்த புள்ளி விபரத் தகவல்களின் அடிப்படையில் அதிகளவான வயோதிபர்களே உயிரிழந்து வருகின்றனர் என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சுகாதார பாதுகாப்பு வழிமுறைகளை மக்கள் முழு அளவில் பின்பற்ற வேண்டும் எனவும் வயோதிபர்களை பாதுகாக்க வேண்டுமெனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அத்தியாவசியமற்ற வகையில் மக்கள் அதிகளவில் செறிந்துள்ள பகுதிகளுக்கான பயணங்களை தவிர்க்குமாறு அவர் கோரியுள்ளார்.
முதல் நாளிலேயே தடுமாறிய ட்ரம்பின் ஹார்முஸ் முற்றுகை... அதிரடியாகக் கடந்த ஈரான் கப்பல்கள் News Lankasri
கவனத்தை திருப்ப முயற்சிக்கும் ரஷ்யா., உக்ரைனுக்கு 1.2 லட்சம் ட்ரோன்களை அனுப்பும் பிரித்தானியா News Lankasri
24 மணி நேரத்தில் எந்தக் கப்பலும் கடக்க முடியவில்லை., அமெரிக்காவின் ஹார்முஸ் முற்றுகை தீவிரம் News Lankasri
முடிவுக்கு வரும் ஈரான் போர் நிறுத்தம்... மத்திய கிழக்கில் படைகளைக் குவிக்கும் அமெரிக்கா News Lankasri