நாட்டில் ஏற்பட்டுள்ள இக்கட்டான நிலை! எடுக்கப்பட்டுள்ள முடிவு
யாழ். நாக விகாரையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த வெசாக் தின நிகழ்வுகள் அனைத்தும் இரத்துச் செய்யப்பட்டுள்ளன.
நாட்டின் தற்போதைய இக்கட்டான நிலையை கருத்திற் கொண்டு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் கோவிட் வைரஸின் தாக்கம் வெகுவாக அதிகரித்து வரும் நிலையில் அரச மற்றும் தனியார் நிகழ்வுகளுக்கு ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ளன.
அதேசமயம், நாட்டின் பல பிரதேசங்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதுடன் பாடசாலைகள் மற்றும் பல்கலைக்கழகங்கள், பாலர் பாடசலைகள் என அனைத்தும் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டிருக்கின்றன.
இதேவேளை, நேற்றைய தினம் நாட்டில் அதிகூடிய கோவிட் மரணங்கள் பதிவாகியிருந்தது.
நேற்று உயிரிழந்த 19 பேருடன் சேர்த்து நாட்டில் கோவிட் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 764ஆக உயர்வடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.