நாரம்மலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம்:நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
நாரம்மலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தரின் விளக்கமறியல் மீண்டும் நீடிக்கப்பட்டுள்ளது.
நாரம்மலை பிரதேசத்தில் அண்மையில் லொறியொன்றை துரத்திச் சென்று நிறுத்தியபோது, சப்-இன்ஸ்பெக்டர் தனது துப்பாக்கியை லொறி சாரதியின் தலையில் வைத்து அச்சுறுத்த முயன்ற போது துப்பாக்கி வெடித்து லொறி சாரதி உயிரிழந்திருந்தார்.
நீதிமன்ற உத்தரவு
நாரம்மலை பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய குறித்த பொலிஸ் உத்தியோகத்தர் அதனையடுத்து நீதிமன்ற உத்தரவின் பேரில் விளக்கமறியலுக்கு அனுப்பப்பட்டிருந்தார்.
நாரம்மல நீதவான் நீதிமன்றில் சந்தேகநபர் மீண்டும் நேற்று(31.01.2024) முன்னிலைப்படுத்தப்பட்ட போது அவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
இந்த சம்பவம் தொடர்பில் குளியாபிட்டிய பிரதேச குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

வடிவேல் பாலாஜி போல் கெட்டப் போட்டு மாறிய அவரது மகன் ஸ்ரீகாந்த்.. இதோ புகைப்படத்தை பாருங்க Cineulagam

இந்தியா-பாகிஸ்தான் எல்லையில் இந்திய விமானப்படை போர் பயிற்சி: களத்தில் Rafale, Sukhoi-30... News Lankasri

பாகிஸ்தானுக்கு புதிய அச்சுறுத்தல்... மிக ஆபத்தான R-37M ஏவுகணைகளை சொந்தமாக்கும் இந்தியா News Lankasri
