நியூசிலாந்து செல்ல முயற்சித்த 63 பேர் திருகோணமலையில் சிக்கினர்
நியூசிலாந்து நாட்டுக்கு கடல் மூலம் செல்லும் எதிர்பார்ப்பில் திருகோணமலை உவர்மலை பிரதேசத்தில் விடுதி ஒன்றில் தங்கி இருந்த 63 பேரை தாம் கைது செய்துள்ளதாக திருகோணமலை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவர்கள் யாழ்ப்பாணம் உட்பட நாட்டில் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் என பொலிஸார் கூறியுள்ளனர்.
அரச புலனாய்வு சேவையின் திருகோணமலை அலுவலகத்திற்கு கிடைத்த தகவல் ஒன்றை அடுத்து, விடுதியை முற்றுகையிட்ட பொலிஸார், சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர்.
கைதானவர்கள் தீவிர விசாரணைக்காகத் திருகோணமலை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளனர்.
விசாரணைகளின் பின்னர் அவர்கள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.