இலங்கை மக்களிடம் அரசாங்கம் விடுக்கும் முக்கிய கோரிக்கை
எதிர்வரும் நத்தார் மற்றும் புத்தாண்டு காலப்பகுதியில் நாட்டை மூட அரசாங்கம் எதிர்பார்க்கவில்லை என அரசாங்க பேச்சாளர் வைத்தியர் ரமேஷ் பத்திரன தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
மீண்டும் நாட்டை மூடி வைக்கும் எதிர்பார்ப்பு ஒன்று அரசாங்கத்திடம் இல்லை. மிகவும் நெருக்கடியுடன் வெற்றிகரமாக தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை நாட்டில் முன்னெடுக்கப்பட்டது. இதனால் நாட்டை மீண்டும் திறந்துள்ளோம். எனினும் இதனால் கோவிட் தொற்றாளர்களை முற்றாக கட்டுப்படுத்தி விட்டோம் என எங்களால் கூற முடியாது.
இந்த நாட்டில் அனைத்து நபர்களும் பாதுகாக்கப்படும் வரை யாரும் பாதுகாப்பாக இல்லை என்றே கூற வேண்டும்.
நாட்டில் அதிகமான மக்கள் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இதனால் நத்தார் காலப்பகுதியில் மக்கள் பொறுப்புடன் செயற்பட வேண்டும் என கேட்டுக்கொள்கின்றோம்.
சுகாதார வழிமுறைகளை பின்பற்றி, நாட்டை முடக்கவிடாமல் பொறுப்புடன் மக்களே செயற்பட வேண்டும்.
நாட்டின் செயற்பாடுகளை தொடர்ந்து முன்னெடுப்பதற்கு மக்கள் அரசாங்கத்திற்கு உதவ வேண்டும் என வைத்தியர் ரமேஷ் பத்திரன கேட்டுக்கொண்டுள்ளார்.
ஈரானின் இந்து சமுத்திர துறைமுகங்களை முடக்கி அடிபணிய வைக்க முடியுமா 15 மணி நேரம் முன்
ட்ரம்ப் நிகழ்ச்சி துப்பாக்கிதாரியின் கொலைப்பட்டியல்... விடுபட்டிருந்த ஒரு முதன்மை அதிகாரியின் பெயர் News Lankasri
ஈரான் தாக்குதலால் அமெரிக்க தளங்களுக்கு பெரும் சேதம்., பழுதுபார்க்க பில்லியன்களில் செலவு News Lankasri
சாலிகிராமம் வீட்டை இடிக்கும் விஜய்... அடுத்தடுத்து சொத்துக்களை இழக்கும் விஜய்! காரணம் என்ன? Manithan
இனிமே இப்படித்தான்.. அதிகம் சம்பளம் வாங்கும் நடிகர்களுக்கு ஷாக் கொடுத்த தயாரிப்பாளர் சங்கம்! Cineulagam