தற்போதைய நிலைமை மிகவும் தீவிரமானது! - தலைமை தாதிய அதிகாரி எச்சரிக்கை
தற்போதைய நிலைமை மிகவும் தீவிரமானது என கொழும்பு தேசிய மருத்துவமனையின் தலைமை பயிற்சி தாதிய அதிகாரி புஷ்பா ரம்யானி சொய்சா எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொழும்பில் இன்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு பேசிய அவர் இதனை கூறியுள்ளார். தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர்,
தற்போதைய நிலைமை கட்டுப்படுத்தப்படாமல் இருந்தால், ஏனையவர்கள் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும்போது அவர்களுக்கு சேவை செய்ய எந்த ஊழியரும் இருக்க மாடார்கள்.
நிலமை மோசமடைந்து வருகின்றது. தாமதமின்றி உடனடி தீர்வுகளைத் தேடுமாறு சுகாதார அதிகாரிகளிடம் வேண்டுகின்றோம். செய்யவேண்டியது சவக்கிடங்குகளை அதிகரிப்பதோ அல்லது மருத்துவமனைகளின் எண்ணிக்கையை அதிகரிப்பதோ அல்ல.
தற்போதைய கோவிட் வைரஸ் நிலமையை நிர்வகிப்பது மற்றும் கட்டுப்படுத்துவதுதான் தீர்வு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரிக்கும்போது வைத்தியசாலை ஊழியர்கள் அதிகரிக்க மாட்டார்கள் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.
தற்போதைய நெருக்கடி நிலை காரணமாக, சுகாதார ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டுள்ளதாகவும், மக்களின் உயிருக்கு ஆபத்து உள்ளது என்பதை புரிந்து கொள்ள வேண்டும் என்று அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
