கொரோனா என நாட்டை எந்த நாளும் மூடிக்கொண்டிருக்க முடியாது: பாதுகாப்புச் செயலாளர்
கொரோனா கொரோனா என எந்த நாளும் நாட்டை மூடிக்கொண்டிருக்க முடியாது என பாதுகாப்புச் செயலாளர் ஜெனரல் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.
சுற்றுலாப் பயணிகளின் வருகை தொடர்பில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போது அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
நாட்டை தொடர்ச்சியாக முடக்க நிலையில் வைத்திருப்பது சாத்தியமானதல்ல என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
எந்தவொரு வேலையை ஆரம்பித்தாலும் அதில் சிறிய குறைபாடுகள் ஏற்படக்கூடும் என அவர் தெரிவித்துள்ளார்.
அவ்வாறான குறைபாடுகளை அடையாளம் கண்டு அவற்றை திருத்திக் கொண்டு இந்த பொறிமுறைமையை நடைமுறைப்படுத்த வேண்டுமென அவர் வலியுறுத்தியுள்ளார்.
இவ்வாறு செய்வதனால் சுற்றுலாத்துறையில் ஈடுபட்டுள்ள எமது நாட்டைச் சேர்ந்தவர்களுக்கு நலன்கள் கிடைக்கும் என பாதுகாப்புச் செயலாளர் கமல் குணரட்ன தெரிவித்துள்ளார்.