கொழும்பில் ஏற்பட்ட குழப்ப சூழ்நிலை - கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த பொலிஸார்
கொழும்பு, நாரஹென்பிட்டியில் மக்களுக்கு கோவிட் தடுப்பூசி வழங்கும் நடவடிக்கையின் போது குழப்ப நிலை ஒன்று ஏறபட்டுள்ளது.
நேற்று சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தில் கொரோனா தடுப்பூசி வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. எனினும் தடுப்பூசி வழங்கப்படவிருந்த எண்ணிக்கையை விடவும் அதிகமானோர் தடுப்பூசி பெறுவதற்கு அவ்விடத்திற்கு வந்தமையினால் பதற்ற நிலை ஒன்று ஏற்பட்டுள்ளது.
தடுப்பூசி பெற்றுக்கொள்வதற்காக மக்கள் காலை 6 மணிமுதல் அவ்விடத்திற்கு வந்து வரிசையில் நின்றுள்ளனர். 9 மணிக்கு அவ்விடத்திற்கு வந்த சுகாதார வைத்திய அதிகாரிகள் தடுப்பூசி வழங்குவதற்கு நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர்.
அவ்விடத்தில் மிகப்பெரிய அளவில் மக்கள் ஒன்று கூடிய நிலையில் அவர்கள் சுகாதார சட்டத்திட்டங்களை மீறி உள்ளே நுழைய முயற்சித்துள்ளனர்.
எனினும் அவ்விடத்திற்கு வந்த பொலிஸார் அவர்களை கட்டுப்படுத்த நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தங்களை தடுப்பூசி பெற வருமாறு கூறிய போதிலும் தடுப்பூசி வழங்கப்படவில்லை என அங்கு வந்த மக்கள் தெரிவித்துள்ளனர்.
மக்கள் கூட்டம் அதிகம் காரணமாக சுகாதார அதிகாரிகள் மற்றும் மக்கள் கடுமையான நெருக்கடி நிலைமைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.





நிலா வாழ்க்கையில் அடுத்து ஏற்படப்போகும் பெரிய சிக்கல், சோழன் என்ன செய்வார்... அய்யனார் துணை அடுத்த வார கதைக்களம் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

ஜேர்மனி பிரித்தானியா ஒப்பந்தம் கையெழுத்து: சிறிது நேரத்தில் ரஷ்யாவிலிருந்து வந்த எச்சரிக்கை News Lankasri

சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

பிரான்ஸ் அழகியை திருமணம் செய்வதற்காக 700 கிலோமீற்றர் பயணித்த நபர்: காத்திருந்த ஏமாற்றம் News Lankasri

அந்தரத்தில் பறந்தபடி என்னோடு நீ இருந்தால் பாடல் பாடி அசத்திய ஷிவானி.. சரிகமப சீசன் 5ல் அசந்துபோன நடுவர்கள் Cineulagam
