ரவி செனவிரத்னவுக்கு எதிரான வழக்கு தொடர்பில் நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு
பொது பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ரவி செனவிரத்னவுக்கு எதிரான வழக்கை தற்காலிகமாக நிறுத்தி வைத்து மேல்முறையீட்டு நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள குறித்த வழக்கை தற்காலிகமாக நிறுத்தி வைத்து இன்று (4) இடைக்கால உத்தரவை பிறப்பிக்கப்பட்டது.
2023 ஆம் ஆண்டில் மதுபோதையில் வாகனம் ஓட்டும்போது போக்குவரத்து விபத்தைத் தடுக்கத் தவறியது உள்ளிட்ட குற்றச்சாட்டுகளின் பேரில் ரவி செனவிரத்னவுக்கு எதிராக இந்த வழக்கு விசாரணை முன்னெடுக்கப்பட்டது.
நிலுவையில் உள்ள வழக்கு
அதன்படி, கல்கிசை நீதவான் நீதிமன்றத்தில் தனக்கு எதிராக நிலுவையில் உள்ள வழக்கை வேறு நீதிமன்றத்திற்கு மாற்ற உத்தரவிடக் கோரி ரவி செனவிரத்ன தாக்கல் செய்த மனுவை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மேலும், மேன்முறையீட்டு நீதிமன்ற நீதிபதிகள் மாயாதுன்னே கொரயா மற்றும் மஹேன் கோபல்லவா ஆகியோர் அடங்கிய அமர்வு முன், தொடர்புடைய மனுவை பரிசீலித்த பின்னர் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
கும்பத்தில் சனி, சூரியன் சேர்க்கை... இந்த 3 ராசியினர் ஜாக்கிரதை! எச்சரிக்கும் ஜோதிட நிபுணர்கள் Manithan